17

"எங்கள பத்தி சொல்ல இன்னா இருக்கு!!"

"நானும் இந்தா இவளும் ஒரே வுட்டுல தான் வாக்கபட்டோம்!!

இத கட்டுனது அல்பாய்சுல போச்சு!! என்ன கட்டுனது குடிய கட்ட ஆரமிச்சது!!

நானும் இதும் ஸ்க்கூல் வேளைக்கும்,, வீட்டு வேளைக்கும் போனோம் எனக்கு ஒரு பையன் ஆறாவது படிக்குறான், பொண்ணு பண்ணண்டாவது படிக்குது!! நா வேள செய்யுற ஸ்க்கூலயும் சரி எம்புள்ளங்க படிக்குற ஸ்க்கூலயும் கண்ணம்மா இன்ஸ்பரேசன் நடக்குது!! அதுல நாங்க எல்லாம் சண்ட போட கத்துகுணோம்!! "நா சொல்ட்டுயிருக்கைலே

சுவாதி :"ஓ சூப்பர் "

"எம்பொண்ணு கூட படிக்குற பொண்ணு எங்க வுட்டுக்கு படிக்க வரும்!! அதாண்ட போய் இந்த மனுச அவன் குசும்ப காமிச்சுறுக்கான்!! கூட இருந்த எம்புளைங்க கத்துகுன வித்தையெல்லாம் இறக்கிற்கானுங்க!! அந்த ஆலு பொட்டுணு போய்ட்டாண்!!வந்து பாத்த இரத்த வெள்ளத்துல என் புருஷன்!! கோவம் வந்து எம்புள்ளங்கல அடுச்சேன்!! அப்பறமா நடந்தத சொன்னதும் என்ன சொல்ரதுன்னு தெரில !! பொண்ணு வயசு புள்ளட்ட இப்படி நடந்தான்னு சொன்னா!! ஆத்தரம் எனக்கே வந்து செத்த பொணத்த செருப்பாலே அடிச்சேன்!! அதுங்க பண்ணது சரிதான்!! அதுக்கு பட்டம் விருது குடுக்கலனாலும் பரவாயில்ல இவங்க கேஸ் போட்டு வாழ்க்கைய நாசாம் பண்ணிருவாங்களே!! அதும் அந்த பொண்ணு அடுத்த வீட்டு பொண்ணு!! அதயும் டேஸன்க்கு இழுத்தாந்து மானத்த வாங்கிடுவாங்க!! அதான் நாங்க பழி ஏத்துட்டோம்"தொண்ட விம்மி சொன்னேன்

"என்ட அந்த ஆளு தப்பா நடந்துகிட்டா, அதுல தப்பிக்க நானும் என்ன காப்பாத்த அக்காவும் அவர அடுச்சு கொண்ணோம்னு சொல்டோம்"அகல்யா முடிச்சா

சுவாதி : "அப்போ புள்ளைங்க!!?"

தரண்யா : அந்த பொண்ணோட அம்மா அப்பா பொறுப்பு ஏத்துகிட்டாங்க!! ஆனா அவங்களே எம்புட்டு நாள்னு தெர்ல,"

சுவாதி : "பரவால சின்ன புள்ளங்கனாலும்! தெளிவா ஸ்க்கூல்ல கத்துட்டத யூஸ் பண்ணி ஒரு பொண்ணோட மானத்த காப்பாத்திற்காங்க!! " யோசிச்ச அந்த பொண்ணு

அகல்யா : "சரி உன் கதை சொல்லு"

சுவாதி : "என் கதைய விடுங்க! உங்க புள்ளைங்க எந்த ஸ்கூல், என்னனு விவரம் எல்லாம் சொல்லுங்க கண்ணம்மா இன்ஸ்பைரேசன் பாத்துக்கும் உங்க புள்ளைங்கள!"

தரண்யா :"அட அத வுட்டு தல்லு எம்புள்ளைங்க எப்படியும் பொளச்சுக்கும் நீ வுன் கதைய சொல்லு!"

சுவாதி :"சரி! என் கதை தான் ஊருக்கே தெரியுமே இதுல நா தனியா சொல்ல என்ன இருக்கு?"

அகல்யா : "இன்னாத்துக்கு அந்த கசுமானத்த அப்பவே போட்டு தள்ளாம, அஞ்சு வருஷம் கேப் உட்டு கொண்ண! அதுவும் நீ செத்துட்டதா இல்லாத்தையும் நம்ப வச்சு! அப்படி செத்தவ எதுக்கு மறுபடி அவனுங்கள கொண்ணனு சரண்டர் ஆன!"

அகல்யா சொல்லி முடிக்க

தரண்யா :"இந்த பாருமா  இங்க எங்க புள்ளைங்க இல்லாம நாங்க இருக்கோம்னா அதுக்கு உன் இன்ஸ்பைரேசன் தான் காரணம்! அதான் மனசு கேக்கல சொல்லு மா!"

சுவாதி :"ம்ம்! உங்கள பாத்தா எனக்கு என் ப்ரண்ட்ஸ் நியாபகம் தான் வருது! ரொம்ப நாள் அப்றம் கலகலனு மனசுல பட்டத அப்டியே பேசுற இரண்டு பேர பாத்த சந்தோஷத்துல இருக்கேன்! "

அகல்யா :"ஐய! எங்கள வுடி நீ! மேட்டர சொல்லு!"

சுவாதி :"இன்னைக்கே சொல்டா அப்றம் ரெண்டு பேரும் என்ட பேசாம போயிடுவீங்களே!!"

அட! என்னமா குழந்தை சிரிக்குது! இத போயி அந்த கமுணாட்டிங்க!!

தரண்யா :"அட இன்னமா நீ! எங்கள பத்தி இப்புடி நினைச்சுப்புட்டியே! இப்ப தானே சொன்ன! மனசுல பட்டத சொல்றோம்னு! அப்றம் எப்புடி பேசாம போவோம்?? நாங்க எல்லாம் அப்புடி இல்ல! "

செயிலர் :"ஏய்! என்ன அங்க கூட்டம் போட்டுகினு?? போங்க போங்க சாப்புட போங்க!"

அகல்யா :"இன்னாத்துக்கு இப்புடு கத்துது?? செத்த நேரம் பேசிற கூடாதே!"

சுவாதி :"வாங்க போய் சாப்பிடலாம் பசிக்குது!"

அதுப்பாட்டுக்கு வயிதுல கை வச்சு கூப்புடுது!! அத பாத்து பரிதாப படுரதா, பெருமை படுரதா, என்னனு புரில! ஆனா ஒன்னு இந்த தைரியம் யாருக்கு வரும்! ஒருத்தன் சும்மா பாத்தாலே ராவெல்லாம் தூங்க கெட்டு போயிடும், இதுல இந்த பொண்ணு!!

அகல்யா :"இன்னக்கா யோசிக்குற?? "

தரண்யா : "ஒன்னுமில்லடி"

சுவாதி :"வாங்க வாங்க சீக்கரம்! இதே மரத்தடிலே உக்காந்து சாப்டா செமையா இருக்கும்! நாம வாங்கிட்டு வந்துருவோம்! "

ச்சே இந்த பொண்ண பாத்து ஆருதல் சொல்றதா? பரிதாபப்படுறதா? பெருமை படுறதா? புரில!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top