Part 10

பாகம் 10

எதிர்பாராத அந்த வினையின்,  எதிர் வினை மிக சுவாரஸ்யமானதாக இருந்தது. யாழினிக்கு,  அபியை பார்க்கும் தைரியம் இல்லாமல் இருந்தது. ஆனால், தனது பார்வையை யாழினி மீதிருந்து ஒரு நிமிடம் கூட நகற்றவில்லை அபி. எப்போது வேண்டுமானாலும் அவளை விழுங்கி விடுவான் போல அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். இப்படி ஒரு எதிர்வினையை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இதுதான் அவளுடைய சமாதானப்படுத்தும் முறை என்றால்,  அவன் எப்பொழுதுமே கோபத்துடன் இருக்கத் தயாராய் இருப்பானே.

அவர்களைப் பார்த்த அனைவருமே குழம்பித்தான் போனார்கள். எப்பொழுதுமே,  சமாதானத்திற்கு பிறகு,  கிண்டலும் கேலியுமாக இருக்கும் அவர்கள் இருவரும்,  அமைதி காத்தது அவர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுவும் அபியை கேட்க வேண்டுமா? என்ன தான் நடந்தது அவர்களுக்குள்...?  அவர்களுக்கு தெரிந்து கொள்ளவில்லை என்றால் தலை வெடித்துவிடும் போலிருந்தது. ஒருவரை ஒருவர் பார்வையை பரிமாறிக் கொண்டனர்.

பாட்டியும் புரிந்து கொண்டவராய்
"யாழினி கண்ணு,  எனக்கு கொஞ்சம் தண்ணி குடுடா" என்றார்.

யாழினி,  தண்ணீர் குவளை காலியாக இருப்பதை கண்டு, சமையலறையை நோக்கி ஓடினாள். குவளையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தவள்,  அபியின் குரலைக் கேட்டு,  திடுக்கிட்டு திரும்பினாள். அபி,  அவள் கையிலிருந்த குவளையை பறித்து ராமுவிடம் கொடுத்து, பாட்டியிடம் கொடுக்க சொன்னான். அவன் அப்படி சொன்ன  போதும், அவன் பார்வையை,  அவள் முகத்தில்லிருந்து அகற்றிவிட வில்லை.

யாழினி புரிந்துகொண்டாள்,  அடுத்து வந்து கொண்டிருப்பது என்னவென்று. அவள் இங்கும், அங்கும் பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர,  அபியின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அபி அவளது நாடியை பிடித்து உயர்த்தி,  அவள் கையை பிடித்து இழுத்தான்.

"என்ன பண்ண நீ?"

"எ...எனக்கு தெ...ரியல"
திணறினாள் அவள்.

"என்னை சமாதானப்படுத்த, நல்ல ஐடியாவ தேடிப்பிடிச்சி வச்சிருக்க. அப்படிப் பார்க்கப்போனா, நான் அடிக்கடி கோவப்படனும் போல இருக்கு? "

அதைக்கேட்ட யாழினியின் கண்ணம் சிவந்தது.

"வெட்கப்படறியா?  என்ன இது,  எனக்கு காலையிலிருந்து,  ஒரே அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா கொடுத்துக்கிட்டு இருக்க?"

அவனைப் பிடித்து தள்ளி விட்டு,  வெளியில் ஓடி வந்தாள் யாழினி. வந்தவளை நந்தா தடுத்து நிறுத்தினான்.

"என்னாச்சு யாழினி?  ஏதோ,  சிங்கம் துரத்திகிட்டு வரா மாதிரி இப்படி ஓடி வர? "

அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரிக்க,  அவர்கள் அபி, சிங்கம் போல் சமையலறையிலிருந்து வெளிவருவதை பார்த்தார்கள்.

"ஏன் உன் கண்ணம் சிவந்திருக்கு?  தெரியாம பச்சை மிளகாயை கண்ணத்துல தடவிக்கிட்டியா?"  அஞ்சலி அவளைக் கிண்டலடித்தாள்.

அவர்கள் யாழினியை இது போல பார்த்ததே இல்லை... அமைதியுடனும்... பதட்டத்துடனும்...

"போதும். எல்லாரும் சும்மா இருக்கீங்களா?  யாழ்ழ்னி,  வா நான் உன்னை  ட்ராப் பண்றேன்." என்றான் அபி.

"இல்ல,  நான்  வரல".
என்றவளை எல்லோரும் அதிர்ச்சியாக பார்த்தார்கள்.

இதுதான் முதல்முறை,  யாழினி,  அபியை வரவேண்டாம் என்று சொல்வது.

"நான் ஒன்னும் உன்னை முழுங்கிட மாட்டேன். வா.."

அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு,  தனது காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அபி. அவளிடம் எதுவும் பேசாமல் கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்து வண்டியை கிளப்பினான். சிறிது தூரம் வந்த பிறகு காரை ஓரமாக நிறுத்திவிட்டு,  தனது சீட் பெல்ட்டை கழட்டி விட்டு,  அவளை நோக்கி திரும்பி அமர்ந்து,  தனது கைகளை கட்டிக்கொண்டான்.

"இப்ப சொல்லு"

"என்ன சொல்லணும்? "

"நீ செஞ்சது என்ன? "

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவளாய் பதில் சொல்ல தயாரானார்

"அதானே,  அதை பத்தி உனக்கு என்ன தெரியும்?  எப்பயாவது நீ அதெல்லாம் முயற்சி பண்ணியிருந்தா தானே?"  பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னால் யாழினி.

அதைக்கேட்டு வாயை பிளந்தான் அபி. அது மிகப் பெரிய சவால் இல்லையா அவனக்கு?

"நான் அத ட்ரை பண்ணலன்றதால, எனக்கு ஏதும் தெரியாதுனு நினைச்சுக்காத. இப்ப சொன்ன இந்த ஒரு வார்த்தைகாக,  நீ ரொம்ப வருத்தப்பட போறே. "

சொல்லிவிட்டு அவள் கையை பிடித்து இழுத்தான் அபி...
....
போன் மணி ஒலிக்க தனது நினைவுகளில் இருந்து மீண்டான் அபி. தான், தனது அலுவலகதில் இருப்பதை கண்ட போது,  அவனுக்கு எரிச்சல் உண்டானது. அவன் அந்த நினைவுகளில் வாழ்வதற்க்கே ஆசைப்படுகிறான். அந்த போன்,  யாரிடமிருந்து வந்தது என்பதை கூட அவன் பார்க்க விரும்பவில்லை. தனது டேபிளில் இருந்து யாழினியின் படத்தை வெளியில் எடுத்தான்.

"என்னை ஏன் இப்படி தண்டிக்கிற யாழ்ழ்னி?  நீ நம்பும் கடவுள் எனக்கு உதவி செய்ய கூடாதா?  என்னால இந்த சித்ரவதையை சகிக்கவே முடியல. நம்மளோட கடந்த காலம் எப்படியாவது போகட்டும். நிகழ்காலத்தில் நீ நீயாகவே என்கிட்ட வந்துடு.  உன்னை மறுபடியும் என்கிட்ட கொண்டு வருவதற்கு நான் என்ன வேணாலும் செய்வேன். இது என்னோட ப்ராமிஸ்."

தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் வலியை பொறுக்க மாட்டாதவனாய்,  தன் விழியோரம் கசிந்த நீரை விரலால் சுண்டினான்,  அபி.

*ஆதிகேசவன் இல்லம்*

மகா, இன்று போல் என்றும் பதட்டத்துடன் இருந்ததே இல்லை. அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நடக்கவிருக்கும் நிகழ்வுகளின் விளைவுகளை நினைத்து பார்க்கும் போது,  அவளுக்கு வயிற்றைக் கலக்கியது. எப்படியும் அபி இதை நடக்க விடப்போவதில்லை. ஆனால்,  அவளால் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியவில்லை. அபியின் திறமை மீது எப்போதுமே அவளுக்கு சந்தேகம் இருந்ததில்லை. ஆனால்,  நம்மை மீறிய சில விஷயங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக,  யாழினியின் மனோ நிலைமை அவளை எதுவும் செய்ய விடாமல் தடுத்தது.

ஆதிகேசவன் குரல் அவளை அவர் பக்கம் திருப்பியது.

"யாரோ ரொம்ப டென்ஷனா இருக்குறா மாதிரி தெரியுது? "
முறுவலித்தார் ஆதிகேசவன்.

"தன் குழந்தைக்கு கெட்டது நடக்கும் போது எந்த அம்மாவாலத்தான் நிம்மதியா இருக்க முடியும்?  நீங்க எப்படி அவ கிட்ட பொய் சொல்லலாம்,  அவளும் கிரீஷும் ஃபிரென்ட்ஸ்னு?  அதுக்கு மேல,  அவ கல்யாணத்துக்கு வேற  நீங்க பேசிகிட்டு இருக்கீங்க."

"நான் பொய் சொல்லல. நானும் ஈஸ்வரும் இதை ஏற்கனவே பேசி வைச்சிருந்தோம். "

"தயவுசெய்து, இப்படி  செய்யாதீங்க,  ப்ளீஸ்".
கெஞ்சினாள் மஹா.

"என் மகளோட சந்தோஷத்துக்காக, நான் இதை  செஞ்சுதான் தீருவேன்".

"அவளோட சந்தோஷம் அபி தான்ங்குறத  மறந்துடாதீங்க".

"அதெல்லாம் பழைய கதை"

"ஒருவேளை அவளுடைய நினைவு திரும்ப வந்தா என்ன செய்வீங்க?  அவளோட நிலைமை என்ன ஆகும்? அவ கிரீஷ  ஏத்துக்குவான்னு நினைக்கிறீர்களா?"

"நிச்சயமா ஆரம்பத்தில் அவளுக்கு கஷ்டமா தான் இருக்கும். ஆனால்,  போகப் போக அவ பழகிக்குவா.  ஏன்னா அவ உறவு முறைகளையும்,  கலாச்சாரத்தையும்,  மதிக்கிறவ. கிரீஷோட தனக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு தெரிஞ்சா,  நிச்சயமா,  எந்த தப்பும் செய்யமாட்டா. என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு"

"அவளுடைய இந்த நிலைமைக்கு காரணமே, அவ அபி  மேல வச்சிருந்த காதல்தாங்குறத மறந்துடாதீங்க. ஒருவேளை,  அவளால உண்மையை ஏத்துக்க முடியலன்னா?  ஒருவேளை அவ தற்கொலை செஞ்சிகிட்டானா?  ஒருவேளை,  நாம செஞ்ச இந்த தப்பை மன்னிக்க முடியாம,  அவ நம்மள வெறுத்து ஒதுக்கினா என்ன செய்வீங்க?  அதுக்கப்புறம் உங்களால நிம்மதியா வாழ முடியுமா?  சொல்லுங்க?"

"இதுக்கெல்லாம்,  காலம்தான் பதில் சொல்லனும். "

"இல்ல. இதுக்கு நீங்கதான் பதில் சொல்லியாகணும். கடவுள் புண்ணியத்துல அந்த ஆக்சிடென்ட் அவளுக்கு நடக்காமல் இருந்திருக்க கூடாதா?  அவ ஆசப்பட்ட படியே,  அவ அபியோட... "

அதேநேரம் வேலையாள்  வந்து,  ஈஸ்வரும் அவரது குடும்பத்தினரும் வந்திருப்பதாக கூறி சென்றான்.

"உன் வியாக்கியானத்தை நிறுத்து. அவங்க கிட்ட ஒழுங்கா நடந்துக்க." எச்சரித்தார் ஆதிகேசவன்.

ஆதிகேசவன்,  ஈஸ்வரையும் அவரது குடும்பத்தினரையும் வரவேற்று உபசரித்தார். யாழினி எளிய மேக்கப்புடன்,  மிக அழகாக இருந்தாள். லலிதா அவளை தனது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டாள்.

"நீ எதைப் பத்தியும் கவலைப் பட வேண்டியதில்லை. எங்களுக்கு உன்னை  பத்தின எல்லா விஷயமும் தெரியும். அதனால, நீ ரிலாக்ஸா இருக்கலாம். இவன்தான் என் பையன் கிரீஷ்." சகஜமாய் கூறினாள் லலிதா.

"ஆமாம்மா,  நீ எதற்காகவும் பயப்பட வேண்டியதில்லை. நான் உங்க அப்பாவுடைய நெருங்கின ஃபிரண்ட். எங்களவிட உன்னை யாராலயும் புரிஞ்சுக்க முடியாது. தைரியமா இரு" -ஈஸ்வர்.

"அப்பா,  நான்  கிரீஷ்கிட்ட பேசலாமா? " யாழினி அனுமதி கேட்டாள்.

ஆதி கேசவன் எதுவும் சொல்வதற்கு முன்,

"தாராளமா பேசுங்க. எங்களுக்கும் இது தான் வேணும். நீங்க ஒருத்தர் கூட  ஒருத்தர் சகஜமாக பழகி,  ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கணும். அது தான் இதுல ரொம்ப முக்கியமானது. நான் சொல்றது சரிதானே அண்ணா? "

என லலிதா கேட்க,  ஆதிகேசவன் சிரித்தபடி தலையசைத்தார். அவரும் இதை தான் எதிர்பார்த்திருந்தார். யாழினி கிரீஷுடன் பேசத் தொடங்கினால்,  அவளுக்கு நிச்சயமாக அவனை பிடித்துவிடும் என்று அவர் நம்பினார்.

இருவரும் தோட்டத்துக்கு சென்று அமர்ந்தனர்.

"நான் கிரீஷ்"

"உனக்கு ,  என்னை பற்றி எல்லாமே தெரியுமா? "

"உனக்கு,  உன்னை பத்தி தெரிஞ்சததை விட எனக்கு அதிகமாகவே தெரியும்"

"அப்போ உனக்கு என்னோட நிலைமைய  புரிஞ்சுக்கிறது ரொம்ப சுலபமா இருக்கும்னு  நினைக்கிறேன்".

"சந்தேகமில்லாமல்"

அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். யாழினிக்கு கிரீஷை ரொம்பவே பிடித்துப் போனது. அவர்கள் சந்தோஷமாக திரும்பியதை பார்த்து பெரியவர்கள் மகிழ்ந்து போனார்கள்.

" அப்பா,  எனக்கு கிரீஷை பிடிச்சிருக்கு. ஆனா,  எனக்கு கால அவகாசம் வேணும். இந்த புது மாற்றத்தை ஏத்துக்கவும்,  இந்த உறவு முறையையும்,  எல்லாரையும் புரிஞ்சுக்கவும் எனக்கு கொஞ்சம் டைம் வேணும். எனக்கு அந்த டைம்ம  குடுக்குறதுக்கு நீங்க தயாரா இருந்தா,  எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆன்ட்டி,  நீங்க என்னை  தப்பா நினைச்சுக்க மாட்டீங்கனு நினைக்கிறேன்".

தனது நிலைப்பாட்டை தெளிவாய் சொன்னாள் யாழினி.

"இதுல தப்பா நினைக்க என்னமா இருக்கு?  நீ சொல்றது சரிதானே? நீ சரின்னு சொன்னதே  எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். எங்களுக்கு இதைவிட வேற எதுவும் தேவையில்லை." என்றாள் லலிதா.

"அவங்க சொல்றது சரிதான். நாங்க உனக்காக காத்திருக்கோம். நீ சரின்னு ஒத்துகிட்டதே எனக்கும் சந்தோஷம்தான்."

ஆதி,  காரியத்தை கெடுத்து விட விரும்பவில்லை. இப்போதைக்கு, யாழினி சரி என்று ஒத்துக் கொண்டதே அவருக்கு பெரிதாகப் பட்டது.

மஹாவும் பெருமூச்சு விட்டாள். அவளுக்கு கால அவகாசம் இருக்கிறது. எதையும் மாற்றும் சக்தி காலத்திற்கு இருக்கிறது. ஒரு நொடியில் எல்லாமே தலைகீழாக மாற வாய்ப்பிருக்கிறது. அவள் நம்பினாள்.

ஆதிகேசவன்னும் ஈஸ்வரூம் ஆஃபீசுக்கு கிளம்பி செல்ல,  லலிதாவும் கிரீஷும் அவர்கள் இல்லம் நோக்கி புறப்பட்டார்கள். மகா யாழினி அறைக்குள்  தயக்கத்துடன் நுழைந்தாள்.

"அம்மா,  நீங்க என்கிட்ட ஏதாவது சொல்லனுமா? "

"உனக்கு உண்மையிலேயே கிரிஷை பிடிச்சிருக்கா? "

""ஏம்மா,  உங்களுக்கு பிடிக்கலையா? "

"அப்படி இல்ல. நீ அவசரப்பட வேண்டாம்னு நான் நினைக்கிறேன்"

"அவசரப்படலியே. நீங்க பாத்தீங்க தானே?  நான் டைம் வேணும்னு கேட்டேனே... "

"அதுல நிச்சயமா எனக்கு சந்தோஷம்தான். ஆனா,  நான் உனக்கு ஒன்னே ஒன்னு மட்டும் சொல்ல ஆசைப்படுறேன். நீ பாக்குறதோ,  கேட்கிறதோ,  எல்லாமே உண்மையில அப்படி இல்லை".

"என்ன சொல்றீங்கமா? "

"உங்க அப்பாவும்,  ஈஸ்வரூம் பிசினஸ் பார்ட்னர்ஸ். அவங்க தங்களோட பிசினஸ்ஸ  பெருக்குவதற்காக,  உன்னோட கல்யாணத்த யூஸ் பண்ணுறாங்கனு நான் நினைக்கிறேன்".

"அதுல எதுவும் தப்பு இல்லையேம்மா"

"எனக்கு,  என்ன சொல்றதுன்னு புரியல." சலிப்புடன் சொன்னாள் மஹா.

"உங்களுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலனு எனக்கு தோணுது".

"எனக்கு பிடிக்கலைன்னா நீ என்ன செய்வ? "

"அப்போ,  உங்களுக்கு பிடிக்கல. சரிதானே?  நான் என் மனசுல வச்சிக்கிறேன். நான் என் மனசுக்கு ஏதாவது தப்பா பட்டா, உடனே இந்த கல்யாணத்த நிறுத்திடறேன். சந்தோஷமா?"

சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்  மகா. அவள் மனதிற்கு நிம்மதி தேவைப்பட்டது. அதனால் கோயிலுக்கு செல்ல தீர்மானித்தாள்.

*சிறிது நேரத்திற்கு பிறகு*

அழைப்பு மணி ஒலிக்க,  ஓடிச்சென்று கதவை திறந்தாள் யாழினி. ஆதியின் அலுவலகத்திலிருந்து ஒரு ஆள் வந்திருந்தான். ஆதி ஒரு கோப்பை எடுத்து வர சொன்னதாக சொன்னான்.
காலையில் தனக்கிருந்த அதித சந்தோஷத்தின் காரணமாக,  ஆதிகேசவன் அந்த கோப்பை மறந்து விட்டுச் சென்றிருந்தார்

"ஆதிகேசவன் சார் அந்த ஃபையில எடுத்துட்டு வரச்சொன்னார்"

ஆதிகேசவன்,  கைப்பட எழுதிக்கொடுத்த துண்டு சீட்டை அவன் காட்டினான்.

மகா வீட்டில் இல்லாததால் ஆதிகேசவன் அறைக்கு சென்று அந்த ஃபைலை தேடத் துவங்கினாள் யாழினி. அந்த ஃபைல் எங்கும் இருக்கவில்லை. அதனால் பீரோவில் தேட துவங்கினாள். அவள் கண்ணில் ஏதோ ஒன்று தென்பட,  அவள் கை அசைவற்று நின்றது. அது ஒரு ஐ ஃபோன். அஞ்சலி கையில் வைத்திருந்த அதே மாடல் ஐ ஃபோன். அவளுக்கு சுருக்கென்றது. ஒருவேளை,  இது அவளுடைய ஃபோனாக இருக்குமோ?  அந்த ஃபோனை கையில் எடுத்துக்கொண்டாள். நேரே அவள் அறைக்கு சென்று அதை ஆன் செய்தபோது, அது ஆனாகவில்லை. அதை சார்ஜருடன் பொருத்திவிட்டு,  கீழே வந்தபோது, மஹா அந்த ஆளிடம் ஃபைலை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

"அம்மா,  எங்க இருந்தது இந்த ஃபைல்? "

"காலையில அப்பா மறந்துட்டு போயிட்டாரு. நான் தான் மேலே எடுத்து வைச்சிருந்தேன்".

"ஓஹோ..."

தனது ஆவலை அடக்க மாட்டாதவளாய்,  தனது அறைக்கு ஓடிச் சென்றாள்,  யாழினி. சார்ஜரில் சொருகியிருந்த மொபைலை,  அழுத்தம் கொடுத்து ஆன் செய்தாள். அந்த மொபைல் ஒளி வெள்ளத்துடன் உயிர் பெற்றது. ஸ்கிரீன்சேவரில் அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தான் அபி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top