காலடி சத்தம்

"என்னவள்
என்று நான்
அறியும் முன்னரே,
எனக்குள்  புகுந்து
வாசம் செய்தவளே!

கால் கொலுசுகள் இல்லாமலே
காலடிசத்தம் எழாமலே
என்னை விட்டு
பிரிய நினைத்தாலும்
நான் அறிந்து கொள்வேனடி!

உன் பாதசுவட்டை
எனக்குள் விட்டு பிரியும்
முன்னரே!
உன்னை
என்னவளாக்கி கொள்வேனடி
என் கண்மணியே !" 

                       -  தர்ஷினிசிதம்பரம்

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top