27. நெஞ்சுரம் கொண்டு நின்று
காட்டிலும் வாழ்க்கையுண்டு
கண்ணம்மா
நாட்டிலே வாழ்க்கையுண்டோ?
நெஞ்சம் பதறுதடி
கண்ணம்மா
உந்தன் பூவுடல்
புழுதியில் காண்கையிலே...
கண்கள் பனிக்குதடி
கண்ணம்மா
உன்னை நாசம் செய்தது ஏன்??
நீ மலரா மொட்டல்லவோ??
பெற்றவள் பெண் தானே
கண்ணம்மா
அவன் தேகத்தேடலுக்கு
உடன்பிறந்தவள் மேனி
கிட்டதில்லையோ?
ஓர் பாவம் அறியாத
கண்ணம்மா
பச்சிளம் துளிர் நீயே
இரையானது ஏனடியோ?
விலங்குகளும் குழந்தையின்மேல்
நேசம் பொழியுதடி
கண்ணம்மா
மானுட மிருகங்களோ
சிசுவென பாராமல்
உன்மேல் பாய்ந்தது
தவிறில்லையோ?
என் மகள் மட்டுமன்றி
கண்ணம்மா
பெண் பிள்ளை பார்க்கையிலே
மனம் கலங்கி போவதுண்டு...
பெண்கள் தெய்வமென்று
கண்ணம்ம்மா
வணங்கிய பூமியன்றோ??
இன்றோ
உன் நிலை காண்கையிலே
கண்ணம்மா
செந்நீர் வழியுதடி...
சிவசக்தி என்றானே
கண்ணம்மா
இன்று உன் நிலைகண்டு
ஆணென்று
வெட்கி தலைகுனிந்தானோ?
வீழ்வதும் வாழ்வதுமே
கண்ணம்மா
நின்கையில் உள்ளதடி
நெஞ்சுரம் கொண்டு நின்று
கண்ணம்மா
காளியின் உருவம்கொண்டு
வந்தது வரட்டுமென்று
அவன் உயிரையும்
குடித்திடடி...
-தர்ஷினிசிம்பா
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top