1


 

வன் எண்ணங்கள் சிகரம் தொடும் உயரம் செல்லக்கூடியவை ! அவன் எண்ணங்கள் உயரே கிளம்புகிற பெரும்பான்மையான சமயங்களில் மற்றவர்களின் கேலியும்,கிண்டலும் அவன் எண்ணங்களுக்கு உயரத் தடை  ஆவதுண்டு , அவனிடம் பேசுகிறவர்கள் தகாத வார்த்தைகளை சொல்லி ,தாழ்வு மனப்பான்மைக்குள் அவனை தள்ளி விடுகிற சமயங்களிலெல்லாம் அவன் கண்ணீருக்குள் மூழ்கி விடுவதுண்டு ,பிரபஞ்சத்தை பிரதிபலிக்கும் அவன் கண்கள் கண்ணீரில் நிறைந்திருந்த ஒரு ராத்திரியில் கவிதை ஒன்று அவனோடு பேச ஆரம்பித்தது !

னவுகளால் நிறைந்தவனே !

கண்ணீரில் மிதப்பவனே !

கண்ணிருக்கும் கண்ணீரை

துடைத்துவிட்டு வா உடனே !

♦முட்டாள் நீயென்று உலகம் சொன்னவுடன் முட்டாளாய்  மாறிவிடும் முட்டாள் நீயில்லை !

சொற்களை நம்பி சோகம் கொள்வதும் ,

வார்த்தைகள் கேட்டு வருத்தம் கொள்வதும்

மடையர்கள் வேலை , மடையன் நீயில்லை !

மேகம் மறைத்தாலும் காகம் பறந்தாலும்

வானம் மாறாது வையத்தில் வீழாது

ன்னைப் பார்த்து உலகம் சொல்லும்

இழிமொழி கேட்டு தாழ்ந்து விடாதே!

கனவுகள் கலைக்க கணைகள் தொடுக்கும்

கரங்கள் கண்டு கலங்கி விடாதே !

வானம் போல வாழப்  பழகு

புல்நுனி மீது பனித்துளி போல

முள் நுனி மீதும் உறங்கப் பழகு

ட்டி வைத்த கோட்டை தனை

கண்ணீரில் கரைத்திடாதே !

மனம்  வரைந்த சித்திரத்தை

அழுதழுது அழித்திடாதே!

ன்னை அழவைத்த

உலகம் இதைப்பற்றி

உனக்கு தெரியுமா ?

 "தைசெய் " "இதைசெய் " என்று

அறிவுரை ஆயிரம் சொல்லும்

உந்தன் வருத்தம் போக்க

ஆறுதல் வார்த்தை சொல்லும்

வெற்றி பெற வழிகள் சொல்லி

வேறு பாதை உனை திருப்பும் ;

ஆடு நனைய அழுகை கொள்ளும்

அதிசய ஓநாய்க்  கூட்டம்

யார் மீதும் முழுதாக

நம்பிக்கை  கொள்ளாதே!

எவர்பற்றி எவரிடமும்

எப்போதும் சொல்லாதே !

சுவரில்லா சித்திரங்கள்

பார்வைக்கு படுவதில்லை

சுவரை முதலில் கட்டு

சித்திரம் அதன்பின் தீட்டு

னவுகள் கண்ணீரில்

மூழ்கி விடக்கூடாது !

னவை கனலாக்கி

கண்ணீர் காயவை!

உணர்வை உணவாக்கி

கனவை வாழவை !

னவுகளால் நிறைந்தவனே !

கண்ணீரில் மிதப்பவனே !

கண்ணிருக்கும் கண்ணீரை

துடைத்துவிட்டு வா உடனே !

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance