9

 நேராக அந்த பழரசம் கொடுத்தவரிடம் சென்றவன் தனக்கு யார் அந்த பழரசத்தை கொடுக்க கூறினார் என்று கேட்க அவர் முதலில் "தெரியாது என்று கூறினாலும் "அவன் கை காப்பை ஏற்றுவதை பார்த்தவர் பயம் தொண்டையை அடைக்க அவன் நெருங்கி வரும் முன்னே "சொல்லுறேன்.ஆர்ட்ஸ் காலேஜ் டீம் கேப்டன் வினை தான் செய்ய சொன்னான் எனக்கு ஒன்னும் தெரியாது என்க அவரை விட்டவன் "வினை" என்று பல்லை கடித்து கொண்டே சென்றவன் கண்ணில் சிரித்து கொண்டே தன் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த வினை கண்ணில் பட ஓங்கி அவன் அமர்ந்திருந்த இருக்கையை எத்தியவன் அவன் சுதாரிக்குமுன்பே அவன் மேல் அமர்ந்து முகத்தில் 4 குத்து குத்தினான்.

அவன் நண்பர்கள் "டேய்ய் "என்று அவனை தாக்க முற்பட அவன் தோலை பற்றியவர்கள் அனைவரும் அவனின் ஒரு குலுக்கலில் கீழே விழுந்தனர் .

மீண்டும் அவன் முகத்தில் ஒரு குத்து குத்தியவன் அவன் சட்டையை பிடித்து மேலே நிற்க வைத்து "சீ ஆம்பளையாடா நீ .ஒழுங்கா சேந்து ஒரு விளையாட்டுல ஜெயிக்க நேர்வழியில் விளையாட தெரில நீலாம் ஒரு டீமுக்கு கேப்டன் .நீ பண்ண காரியத்தால் என் என் சதுஇப்போ செத்து பொழச்சு வந்துருக்கா .இதோ பாரு அவளுக்கு மட்டும் ஏதாவது ஆயிருந்துச்சு உன்ன அடிச்சுட்டு போறவன் இங்கயே உன்ன பொதச்சுட்டு போயிருப்பேன் .இனியாவது பொட்ட மாறி சூழ்ச்சி பண்ணி ஜெயிக்க பாக்காம ஆம்பளையா ஒத்தைக்கு ஒத்த நின்னு ஆடுடா"என்றவன் கடைசியாக அவனை ஒரு உலுக்கு உலுக்கி விட்டு செல்ல

 கீழே விழுந்து எழுந்த வினை தன்னை சுற்றி அனைவரும் தன்னை பார்ப்பதை உணர்ந்தவனுக்கு அவமானமாய் இருக்க தலைக்கு மேல் கோபம் ஏற"உன்ன விடமாட்டேன்டா நீ பண்ண காரியத்துக்கு நீ நெனச்சத விட பெரிய தண்டனையா குடுகுறேன்டா .wait for my turn " என்றவன் தட்டு தடுமாறி எழுந்து தன் நண்பர்களுடன் அக்கல்லூரியை விட்டு சென்றான் .

அவன் அடிப்பதை பார்த்த சரணும் ஷ்ரவனும் அங்கேயே உறைந்து நின்றுவிட்டனர் அவன் அடி அத்தனை ரௌத்திரமாய் இருந்தது.பின் அவன் சென்றதும் சுதாரித்தவர்கள் இது தங்கள் ஆசிரியர்கள் கவனத்திற்கு செல்லாமல் இருப்பதற்காக சில வேலைகளை பார்த்து விட்டு சென்றனர்.

பின் மீண்டும் சைந்தவியிடம் சென்றவன் மற்ற நண்பர்களிடம் சொல்லி கொண்டு அவளுடன் வீட்டிற்கு செல்ல முற்பட்டான்.அவன் பெயரை சொல்லி சரண் அழைக்க சைந்தவியும் அங்கே நிற்க ஷ்ரவன்"சையு அவன்ட கொஞ்சம் பேசணும் நீ போ அவனை அனுப்புறோம் "என்க

 அவளோ "என்னடா secretaah சரி சரி சீக்கரம் அனுப்புங்க என்றவள் அங்கிருந்து சென்றதும் அவனிடம் வந்த 

ஷ்ரவன் "எப்போல இருந்துடா சையுவும் நீயும் லவ் பண்றீங்க?" என்று கேட்க 

அவனுக்கோ தூக்கி வாரி போட்டது வித்யுத்"எது loveaah நானா டேய்ய் ஒளராதடா "என்று கூற

சரண் "எது நாங்க ஒளறுறோமா நீங்க இன்னும் உங்களையே புருஞ்சுக்கலைனு சொல்லுங்கடா .அவளும் நாங்களும் கிட்ட தட்ட 10 வருஷமா friends எங்களுக்கு தெரியாத அவ எப்படி எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு .இது வரைக்கும் அவ அவளோட உடம்ப வருத்திகிட்டு எதுவுமே பண்ணதில்ல ஆனா இன்னைக்கு உனக்காக 1 மணி நேரமா மயக்கத்தை கட்டு படுதீருக்கா,ஒரு நாள் கூட அவ தோள்ல கூட நாங்க கை போட்டதில்லை அவ போடவும் விட்டதில்லை இன்னைக்கு என்னனா நீ அவளை கட்டி புடிக்குற அவளும் உன்ன கட்டி புடிக்குறா அண்ட் நீ பதட்டப்படுறதுக்கான அதே அளவுக்கு துடிப்பை அவ கண்ணுல நா பாத்தேன். நீ எதுக்கும் தீர்கமா தெளிவா முடிவெடுக்குறவன் இன்னைக்கு சாதாரண மயக்கத்துக்கு இவ்ளோ ரியாக்ட் பண்ற .இதை எல்லாம் நாங்க எப்படி எடுத்துக்குறதான் சொல்லு ?"என்க

அவனுக்கோ தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை தன்னுள் எழும் உணர்வு காதலா என்றும் புரியவில்லை .அவன் அப்படியே நிற்க அவன் அருகில் வந்த ஷ்ரவன் "நீ வார்த்தைக்கு வார்த்தை என் சது என் சதுனு தான்டா சொன்ன .யாரானாலும் சண்டை போட கூடாதுடா நம்மள prove பண்ணி அவுங்கள தல குனிய வைக்கணும்னு சொல்றவந்த நீ நீ இன்னைக்கு அவனை போய் அந்த அடி அடுச்ச நீ அடுச்சத பாத்து நாங்களே பயந்துட்டோம் .குழப்பமா இருக்குன்னா யோசிச்சு பாருடா உனக்கே உன் மனசு புரியும் "என்று அவனை நன்றாக குழப்பியவர்கள் விடை பெற்று சென்றனர்.

குழம்பி போய் வந்தவனை பார்த்த சைந்தவி "ஹே என்னடா இவ்ளோ திங்கிங்க்ல இருக்க சரி இல்லயே நீ.கெளம்பலாமா "என்க

அவனோ "ahn சது என்ன சொன்ன?"என்று கேட்க

அவளோ "என்ன என்ன சொன்னேனா இன்னைக்கு ஒரு மார்க்கமா தாண்டா இருக்க நீ .கெளம்பலாமான்னு கேட்டேன் ."என்க

அவனும் "ahn போலாம் "என்றவன் தன் வீட்டிற்குள் சென்று லட்சுமி அம்மா கூறுவது காதிலேயே விழாமல் தன் அறைக்கு சென்றவன் தன் அலமாரியை திறந்தான் .அதில் ஒரு அழகான 30 முதல் 35 வயது மதிக்க தக்க ஒரு நடுத்தர வயது பெண்மணியின் மார்பளவு புகைப்படம் இருந்தது .

அவனதுவதனத்திற்கும் அதிலிருப்பவரின் வதனத்திற்கும் அத்தனை ஒற்றுமை இருந்தது.அப்புகைப்படத்தை வெளியில் எடுத்தவன் தன் மார்போடு சேர்த்தனைதான் பின்அப்புகைப்படத்தோடு balconyku சென்று அமர்ந்தவன் அந்தவானத்தை வெறித்தவன் பின் மீண்டும் திரும்பி அப்புகைப்படத்தை தன் கையால் வருடியவன்"சாரு நீ போனதுகப்ரோம் நா அழுததே இல்லை இன்னைக்கு தான் சதுக்கு அப்டி ஆனதைபாத்ததும் எனக்கு என்னையே அறியாம கண்ணீர் வந்துருச்சு 

.அவ என் கூடஇருக்கும்போதுலாம் நீ என் கூடவே இருக்குற மாறியே இருக்கு சாரு .அவளைபாத்ததுகப்ரோம் தான் கொஞ்சம் கொஞ்சமா என் வாழ்க்கைல சந்தோஷம் திரும்ப வருது.அவளுக்கு எதுவும் ஆனா என் மனசுல யாரோ ஈட்டிய வச்சு குத்துற மாறி இருக்கு சாரு.நாஎன்ன பன்றேன்னு எனக்கே தெரில .எப்போவும் அவ என் கூடவே இருக்கனும்னு தோணுது சாரு .

ஆனாஇது காதலா ??அப்டியே இது காதலா இருந்தாலும் அவ என்னநண்பனா பாக்குறா நா அவளை காதலிக்குறேன்னு சொல்லி அவளோட நட்பும் போயிருமோனு பயமாஇருக்கு சாரு.ரொம்ப குழப்பமா இருக்கு நீ தான் என்ன வழி நடத்தனும் "என்றுஅப்புகைப்படத்திடம் பேசியவன் அதை கையில் எடுத்து நெற்றியில் முத்தமிட்டான். மீண்டும் அதை தன் அலமாரியில் வைத்த சற்று நேரம் படித்து விட்டு உறங்கினான்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top