ஓர் இனிய பதிவு
#கணவன்_மனைவி
#இல்லறத்தை #நடத்தவேண்டிய #முறைபற்றிய_ஓர்இனியபதிவு. ♥
♥சிற்றூர் ஒன்றில், ஒரு கணவனும்
அவன் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். என்றாலும் வறுமை அவர்களை வாட்டி வறுத்தியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து,
♥"வீட்டில்உள்ள காளைமாட்டைக் கொண்டுபோய்ச் சந்தையில் விற்று,
அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால், குடும்பத்தை நகர்த்தலாமே" என்று யோசனை கூறினாள்.
♥அவனும் அதற்கு உடன்பட்டு,
மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்து சென்றான்.
வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது. அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன் அவனைப் பார்த்து,
♥"ஏனய்யா, அந்த முரட்டுக்காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக
என் ஆட்டை உனக்குத் தருகிறேன்"
என்றான்.
♥அறிவில் குறைந்த அந்தக் கணவனும்
மறுப்பேதும் சொல்லாமல் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக்கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான்.
♥எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி,
"கோழியென்றால் கையிலேயே தூக்கிக்கொண்டு போய்விடலாம்"
♥என்று ஆசை காட்டியதும், அதற்கும் அந்த அறிவிலிக் கணவன் ஒப்புக்கொண்டு, ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக்கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான்.
♥போகும்வழியில் ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு
அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி,
ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக்கொண்டான்.
♥அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது, அவன் வீட்டுக்குப்
பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து, ''அட முட்டாளே!
நானும் உன்னைக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்.
♥மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய்; ஆட்டைக் கொடுத்துக் கோழியை வாங்கினாய்; கோழியைக் கொடுத்துத் தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய் -இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்; அல்லது உன்னை அடித்துத் துரத்திவிடுவாள்'' என்றான். அதற்கு அந்த அறிவிலிக் கணவன்,
♥"அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது; என் மனைவியை நான் நன்கு அறிவேன்"
என்றான்.
♥தான் சொல்வதுதான் நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் வேறு கட்டிக்கொண்டனர்.
♥நடந்தால் அறிவிலிக் கணவன் தனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு
எழுதி வைத்துவிடவேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன்,
தனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிடவேண்டும்.
♥இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிற்குத் திரும்பினர்.
♥அண்டை வீட்டுக்காரன், அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களை யெல்லாம் சொல்லி,
♥" உன் கணவன் மாட்டோடு சென்று
ஒரு கோப்பைத் தேநீர் அருந்திய நிறைவோடு திரும்பியிருக்கிறான்"
என்று கேலி செய்தான்.
♥அறிவிலியின் மனைவியோ தன் கணவனைப் பார்த்து,
"அந்தத் தேநீரையாவது மனநிறைவுடன் அருந்தினீர்களா?''
என்று அன்பொழுகக் கேட்டாள்.
♥பக்கத்து வீட்டுக்காரனுக்கு
ஒரே அதிர்ச்சி. பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக்கடையை எழுதிக் கொடுத்துவிட்டான்.
♥மறுநாள் அந்த அறிவிலிக் கணவனைப் பார்த்து அவன், ''என்னடா உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?" என்று கேட்டான்.
♥"அப்படியொன்றுமில்லை. என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதை மூன்றாவது நபரின் முன்னால் காட்டிக்கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் துணிவில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்'' என்றான் அந்த அறிவிலிக் கணவன்.
♥♥கணவன், மனைவி இருவரும் ஒருவர் வினையை மற்றொருவர் உடனிருந்து தூய்மை செய்து வாழ்வதே இல்லறம்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top