அதிசயக்குழந்தை - உணவு
சாப்பிடாயா என்று கேட்டேன்
சாப்பிடேன் என்றான்
அதிசய குழ்ந்தை .......!!!
என்ன சாப்பிட்டாய் ?
என்ன சாப்பிடாய் என்று கேட்காமல்
எப்படி சாப்பிடாய் என்று கேளுங்கள்
என்று சொன்னான் .....!!!
எப்படி சாப்பிட்டாய் ?
அடித்து பறித்து சாப்பிட்டேன்
நீ அத்தனை கொடூரமானவனா ?
நான் மட்டுமல்ல நீங்களும்
அப்படித்தான் சாப்பிட்டு உள்ளீர் .....!!!
தன் இனத்தை பெருக்க வந்தத
தன் உணர்வை வெளிப்படுத்த வந்த
அத்தனை உயிரினத்தையும்
நாம் அடித்து அதன் வாழ்வுரிமையை
பறித்துதானே - சாப்பிடுகிறோம் .....!!!
மாங்காய் தேங்காய் என்று
அவை முதுமை அடைய முன்னரே
அடித்து இழுத்து பறித்து சாப்பிடுகிறோம்...!
குடியோடு குடித்தனமாய் தூங்கும்
ஜீவன்களுக்கு தூக்கத்திலேயே
கண்ணி வைத்து கொலை செய்து
சாப்பிடுகிறோம்
கூட்டம் கூட்டமாய் பார்க்கும்
பறவைகள் - சாரை சாரையாய்
அலைந்து திரியும் மீன்கள்
அத்தனைக்கும் வலைபோட்டு
வாழ்வுரிமையை சாப்பிடுகிறோம் ....!!!
எல்லாமே இறைவன் எமக்கே
படைத்தவன் என்று இறைவனை
பிணையாக வைத்து அத்தனையின்
வாழ்வுரிமையைசாப்பிடுகிறோம் ....!!!
கேட்டால் அதுதான் உணவுசங்கிலி
என்று ஒரு கோட்பாட்டையும்
வைத்திருக்கிறோம் - சொல்லுங்கள் ....!!!
ஆசானே ....!!!!
சமைத்து சாப்பிட்டோமா ?
சண்டையிட்டு - மனசமரசத்துடன்
சாப்பிட்டோமா?
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top