அதிசயக்குழந்தை - உணவு


சாப்பிடாயா என்று கேட்டேன் 
சாப்பிடேன் என்றான்  
அதிசய குழ்ந்தை .......!!!

என்ன சாப்பிட்டாய் ?

என்ன சாப்பிடாய் என்று கேட்காமல் 
எப்படி சாப்பிடாய் என்று கேளுங்கள் 
என்று சொன்னான் .....!!!

எப்படி சாப்பிட்டாய் ?

அடித்து பறித்து சாப்பிட்டேன் 

நீ அத்தனை கொடூரமானவனா ?

நான் மட்டுமல்ல நீங்களும்  
அப்படித்தான் சாப்பிட்டு உள்ளீர் .....!!!

தன் இனத்தை பெருக்க வந்தத 
தன் உணர்வை வெளிப்படுத்த வந்த  
அத்தனை உயிரினத்தையும் 
நாம் அடித்து அதன் வாழ்வுரிமையை 
பறித்துதானே - சாப்பிடுகிறோம் .....!!!

மாங்காய் தேங்காய் என்று 
அவை முதுமை அடைய முன்னரே 
அடித்து இழுத்து பறித்து சாப்பிடுகிறோம்...!

குடியோடு குடித்தனமாய் தூங்கும் 
ஜீவன்களுக்கு தூக்கத்திலேயே 
கண்ணி வைத்து கொலை செய்து 
சாப்பிடுகிறோம் 

கூட்டம் கூட்டமாய் பார்க்கும்
பறவைகள் - சாரை சாரையாய்
அலைந்து திரியும் மீன்கள்
அத்தனைக்கும் வலைபோட்டு 
வாழ்வுரிமையை சாப்பிடுகிறோம் ....!!!

எல்லாமே இறைவன் எமக்கே 
படைத்தவன் என்று இறைவனை
பிணையாக வைத்து அத்தனையின் 
வாழ்வுரிமையைசாப்பிடுகிறோம் ....!!!

கேட்டால் அதுதான் உணவுசங்கிலி 
என்று ஒரு கோட்பாட்டையும்
வைத்திருக்கிறோம் - சொல்லுங்கள் ....!!!

ஆசானே ....!!!!

சமைத்து சாப்பிட்டோமா ?
சண்டையிட்டு - மனசமரசத்துடன்
சாப்பிட்டோமா? 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #poetry