9

"இங்க பாருங்க அவர் என்னை கல்யாணம் பண்ணது தான் உங்க பிரச்சனை அப்படினா... நான் இங்கே இருக்க மாட்டேன் போய்டுறேன். என்னால நீங்க உங்க பிள்ளையை திட்டாதிங்க." என்றாள் சற்று கோபம் கலந்து.

'அய்யய்யோ,! என் டார்லிங் கோபபட்றாளே... அப்பா... ஏம்பா இப்படி ஓவர் ஆக்ட் கொடுத்து சொதப்புறிங்களே?' என்று நினைத்தவன், 'ஹுஹும்... இவளை யோசிக்கவே விடக்கூடாது? ஏதாவது செய்யணுமே? இப்போ என்ன செய்யலாம்?' என்று யோசித்தவள்.

"நான் அறிவை தான் விரும்புறேன். அவளுக்கு இப்படி பட்ட நேரத்துல கூட நான் துணை இல்லைன்னா அப்புறம் நான் அவளை உயிருக்கு உயரா  மூணு வருஷமா விரும்பினத்துக்கு என்ன அர்த்தம்? நாங்க பிளான் பண்ணியெல்லாம் இப்படி செய்யலை.  நாங்களே எதிர் பார்க்கல. அப்படி ஒரு சூழ்நிலை. உங்களுக்கு பிடிக்கலைன்னா நானும் போய்டுறேன். என் பொண்டாட்டி இல்லாத இடத்துல எனக்கென்ன வேலை?" என்று முறைத்துக் கொண்டே கூறினான்.

"கொஞ்சம் தள்ளுங்க. நான் வர்ற வரைக்கும் கொஞ்சம் புள்ளைங்ககிட்ட பேசிட்டு இருங்கன்னு சொன்னா? என்ன வேலை செஞ்சுட்டு இருக்கீங்க? அப்பா புள்ளை ரெண்டு பேருக்கும் இதே வேலை." என்று இருவரையும் கடிந்தபடி கையில் ஆரத்தி தட்டுடன் வந்து நின்றார் சிவாவின் அம்மா.

"நான் சும்மா மருமக கிட்ட பேசிட்டு இருந்தேன் மா. அவ்ளோ தான்.😁😁" என்றார் நமுட்டு சிரிப்புடன் சிவாவின் அப்பா.

ஆவென்னு வாயை திறந்து பார்க்கவில்லை அறிவு. ஆனால், அதுபோல் தான் இருந்தது அவளின் முக பாவனை.

திரும்பி சிவாவை பார்க்க, அவன் அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்து கொண்டிருந்தவன், கண் சிமிட்டி புன்னகைக்கவும் கோபமாய் முறைத்து திரும்பி கொண்டாள்.

'வாடி என் மாமன் பெத்த சப்பாத்தி கள்ளி. என்னையா முறைக்கிற? நீ எத்தனை தடவை முறைக்கிறேன்னு கணக்கு வச்சு வட்டியும் முதலுமா என் ஸ்டைல்ல திருப்பி தரேன்டி.' என்று உள்ளுக்குள் நகைத்தபடி திரும்பினான்.

"பேசுவிங்க பேசுவிங்க... நான் தான் பார்த்தேனே நீங்க பேசுற லட்சணத்தை...😏😏 நீங்க இதே மாதிரி பேசினா உங்களுக்கு நைட் சாப்பாடு கட் பண்ணிடுவேன். அதோட ரெண்டு நாளைக்கு வீட்டுக்குள்ளயே விடமாட்டேன். ஞாபகம் இருக்கட்டும்." என்றார் நிமிர்வாய் முறைத்து😡😡.

"😟🙄 நான் என்ன பண்ணேன். நம்ம வீட்டுக்கு மருமக புதுசா முதல் முறை வந்துருக்கா. இங்க வந்த முதல் சந்திப்பை என்னைக்கும் மறக்க கூடாதுன்னு கொஞ்சமா விளையாடினேன். அதுக்கு போய் சோறு போட மாட்டேன். வீட்ல வைக்க மாட்டேன்ன்னு ஹாஸ்டல் வார்டன் மாதிரி மிரட்டுற?" என்றார் பாவமாய்.

"போதும் போதும் உங்க பேச்சை நிறுத்திட்டு வாயை மூடிட்டு உள்ள போங்க." என்று ஆரத்தியை எடுத்தவர்.

"நீ எப்போ இந்த வீட்டுக்கு வருவன்னு எல்லோரும் எதிர்பார்த்ததுட்டு இருந்தோம்டா. கொஞ்சம் சீக்கிரமே வந்துட்ட. இருந்தாலும் எங்க எல்லோருக்கும் சந்தோஷம். வலது காலை எடுத்து வச்சு ரெண்டு பேரும் சேர்ந்து உள்ள வாங்கடா." என்று திருஷ்டி கழித்தார்.

வலது காலை எடுத்து வைத்து இருவரும் உள்ளே நுழையவும் அவள் எதிர்பாராமல் வேகமாய் ஓடி வந்து இறுக்கமாய் அணைத்து கொண்டது ஒரு உருவம்.

மிகவும் அதிர்ந்து போன முகத்துடன் அணைத்திருப்பவரை அறிவு பார்க்க, "அண்ணி. வெல்கம் டூ அவர் ஹோம்." என்று இரண்டு கன்னத்திலும் மாறி மாற்றி முத்தமிட்டாள் சிவாவின் தங்கை வனிதா.

"ஏய் வனி. விடு அவளை. இப்போ தான் வீட்டுக்குள்ளயே நுழையறா. அதுக்குள்ள எதுக்கு பயமுறுத்துற?" என்று முறைத்தான்.

"போண்ணா." என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொள்ள..

"சரி விட்றா. சின்ன பொண்ணு தானே?" என்றார் அவனின் அம்மா.

"ஹா... இப்படியே செல்லம் கொஞ்சிட்டே இருங்க. இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல கல்யாணம் பண்ணி மாமியார் வீட்டுக்கு அனுப்பனும்." என்றான் வம்பிழுக்க.

"டேய்... அண்ணன்னு கூட பார்க்க மாட்டேன்.கல்லெறிஞ்சு மண்டைய உடைச்சிருவேன். எனக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்..?  நான் இன்னும் நிறைய படிக்கணும்... போடா..." என்றவள் அறிவழகியிடம் திரும்பி,

"ஹாய் அண்ணி. நான் வனிதா. இவனோட தங்கச்சி." என்று கை நீட்டினாள்.

வனிதாவின் ஸ்நேகமான பேச்சு அறிவழகியின் இறுக்கத்தையும் குழப்பத்தையும் தள்ளி வைக்க,
"ஹாய் நான் அறிவழகி." என்று முதல் முறையாக தன் முத்து பற்களை திறந்து அழகாய் சிரித்தாள்.

"எனக்கு தெரியுமே.." என்றாள் குறும்பாய்.

"தெரியுமா எப்படி?" என்றாள் அறிவழகி குழப்பமாய்.

"ஆமா. உங்களுக்கு தான் எங்க யாரையும் தெரியாது. ஆனா, எங்க எல்லாருக்குமே உங்களை தெரியும்." என்று புன்னகைத்தாள் வனிதா.

ஒன்றும் புரியாமல் விழித்த அறிவு, "எப்படி?" என்றாள் சந்தேகமாய்.

"அது..." எனும் பொழுது "அவளுக்கு வேற வேலை இல்ல. எதையாவது உளறிட்டு இருப்பா. நீ வா." என்றவன் அன்னையின் பக்கம் திரும்பி கண் ஜாடை காட்டி, "அம்மா என்ன சமைச்சிருக்கிங்க? ரொம்ப பசிக்குதும்மா." என்றான் ஷிவா.

"டேய்! இவன் ஒருத்தன் எப்போ பாரு சோறு சோறுன்னுகிட்டு." என்று அதட்ட, இதை பார்த்துக் கொண்டிருந்த  அறிவழகி கலகலவென சிரிக்க தொடங்கினாள்.

அவளின் சிரிப்பை கண்டு வீட்டில் இருந்தோருக்கு நிம்மதி பெருமூச்சி வர தொடங்கியது.

"பார்த்தீங்களா.. உங்க அருமை மருமகளுக்கு என்னை திட்டினா எவ்ளோ சந்தோஷம்?" என்று அறிவை முறைத்தான் ஷிவா.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #family#love