1..
அந்த எட்டு மாடி கட்டிடம் பெரிய பெரிய கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தபட்டு உள்ளமைப்புகளும் விஸ்தாரமாகவும் புதுவிதமாகவும் அமைந்து லன்டன் மாநகரத்தின் சிறந்த கட்டிடங்களுள் ஒன்றாக விளங்கும் படியிருந்தது.அந்த கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தனது அறையின் ஜன்னல் அருகே அரவிந்த் நின்று கொண்டிருந்தான்.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருப்பான் என அவனுக்கே தெரியாது.பெருமூச்சடன் தன் கை கடிகாரத்தில் மணி பார்த்தான்.தனக்கு நேரமாவதை உணர்ந்தவன் பெட்டில்வீச பட்டிருந்த தனது செல்போனை எடுக்கும் போது அவனது அறையின் இன்டர்காமில் ரிசப்சனிஸ்ட் அழைத்து அவனை காண ஹுதய்ஃபா வந்திருப்பதாக கூற அவனை மேல அணுப்பும் படி கூறிவிட்டு பெட்டில் அமரந்தான்.
"எக்ஸ்க்யூஸ்மி சார்..மே ஐ கம் இன்.."
என்று குரல் மட்டும் கேட்க,
"டேய்..என்னடா இது எக்ஸ்க்யூஸ்லாம் கேட்டிகிட்டு வாடா.."
என்றான்.
"இல்ல சார்..நீங்க எவ்ளோ பெரிய ஆளு..எதாவது பிஸியான வேலைல இருப்பிங்க.."
"ஹுதய் இப்படியே பேசிடடிருந்த பல்லை உடைத்திடுவேன்..என்னடா ஆச்சு உனக்கு..."
"அதை நான் கேட்க வேண்டும்..உனக்கு என்னாச்சுடா ஏன் இப்படி இருக்க..ஒத்து கொள்கிறேன் நீ பெரிய விஞ்ஞானி தான்..உனக்கு வேலை தலைக்கும்மேல் இருக்கும் தான்..அதற்கென யாரிடமுமே பேசாமல் ஏன்டா இப்படி..அம்மா அப்பா எவ்ளோ கவலை படுகிறார்கள் தெரியுமா..?
அவர்களுக்கு எல்லா வசதியும் ஏற்படுத்தி வைத்தால் உன் கடமை முடிந்திடுமா..?
அட்லீச்ட் மாததிற்கு ஒருமுறையாவது போன் பேசினால் தான் என்ன..?அவ்வளவு ஏன் நானும் இதே லன்டனில் தான் வசிக்கிறேன்..ஆனால் உன்னிடம் கடைசியாக நான் பேசியே எவ்ளோ மாசம் ஆச்சு.."என்று படபடவென பொரிந்து தள்ளினான்.
"உனக்கு தான் தெரியுமில்ல நான் என் பிராஜெக்டில் ரொம்ப மும்முரமாக இருகிறேன் என்று..எங்களது பல நாள் கஷ்டத்திற்கு முடிவு வரபோகிறது..இந்த நிலையில் என்னால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.."
"ஆமா எதாவது கேட்டால் இதை ஒன்று சொல்லிகொள்..அப்படி என்ன பிராஜக் எதை பற்றியது என்று கேட்டால் அது சொல்லமுடியாது சீக்றேட் மிஷன் என்பாய்..போடா கேட்டு கேட்டு அலுத்துவிட்டது....அப்படி யாரிடமும் சொல்லாமல் மறைக்கும் அளவிற்கு என்ன மிஷன்..டேய் எதாவது தப்பானதை கண்டு பிடிக்கிறியா...அந்த காலத்தில் அமேரிக்கென்ஸ் ஆட்டம் பாம் கண்டுபித்தது மாதிரி எதாவது.."என்று உணர்ச்சிவசபட்டு கேட்டு விட ஹுதயின் கண்களை நேராக பார்த்தவன்,
" 'அறிவையும் திறமையையும் ஆக்கத்திற்கு பயன்படுத்த வேண்டுமேயன்றி அழிவிற்கில்லை'
என்பது என் தாயும் தாய்நாடும் எனக்கு கற்று கொடுத்தது..உயிரே போனாலும் இந்த கொள்கையிலிருந்து நான் விலக மாட்டேன்.."என்று உறுதியாக அரவிந்த் கூற ஒரு நொடியில் தன் உயிர் நண்பனையே சந்தேகபட்டுவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியடைந்தான்.
"சாரி டா.."என்றவனை தோழோடு அணைத்தவன் "இப்ப உனக்கு நான் என்ன பிராஜெக்ட் பண்றேன் என்று தானே தெரிய வேண்டும்...சொல்றேன்.."
என்றான்.
"SF5CF3 யோட தொழில்துறை மூலப்பொருள் எதுவென கண்டுபிடிப்பது தான் என் கான்செப்ட்.."
"SF5CF3னா..? கொஞ்சம் விரிவாக சொல்லுடா.."
"Trifluromethyl sulphur penta fluoride.."என்று அரவிந்த் கூறியதும் அவனை முறைத்தவன் "நான் கிளம்புறேன்.."என்று போக
"ஹுதய்..ஹுதய்..நில்லு.."
என்று சிரித்துகொண்டே அவனை பிடித்து நிறுத்தியவன் "நான் லேப்பிற்கு தான் இப்பொழுது போறேன்..நீயும் வா..."
என்றான்.பின் இருவரும் கிளம்பி அரவிந்த் காரில் ஏறிகொள்ள வண்டி கிளம்பியது.
அரவிந்த் ஒரு வளர்ந்து வரும் இளம் விஞ்ஞானி..அவனது ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் அவனுக்கு உலகளவில் மேலும் மேலும் புகழ் சேர்த்தது.
"ஹுதய் நீ இந்த புவி சூடாதல் (Global warming), பசுமை குடில் விளைவு (green house effect) பற்றிய விழிப்புணர்வு நிறைய படித்திருப்பாய்...
கேள்விபட்டிருப்பாய் அல்லவா..?"
"அரைக்குறையாக தெரியும்..கொஞ்சம் அதை பற்றியும் சொல்லேன்.."
"ம்ம்ம்... கார்பன் டைய் ஆக்சைட், நைட்ரஸ் ஆக்சைட்,கார்பன் மோனாக்ஸ்சைட் போன்ற பசுமை குடில் வாயுகள் நம்ம வளிமண்டலத்தில் இருக்கும்.இந்த வாயுகள் தான் உலகத்த ரொம்ப சூடாகாமலும் ரொம்ப குளிர்ச்சியாகாமவும் பார்த்து கொள்ளும்..ஆனால் மனுஷங்க நம்மளோட வேலையால அந்த கேஸ்லாம் ரொம்ப அதிகமாகவும் வலிமையாகவும் ஆயிடுச்சு..Example க்கு கார்பன்மோனாக் ஸ்சைட் நம்ம வாகனங்களால் அதிகரிக்கும், மீதேன்,CFC போன்றவை எல்லாம் பெரிய பெரிய தொழிற்சாலைகளால்,குளிரூட்டு பெட்டிகளால் அதிகரிகிறது.அதனால் பனிகட்டிகள் உருகி கடல் மட்டம் அதிகரிக்கும் இதனால் தான் அடிகடி புயல் வருவது,கடல் கொந்தளிப்பது எல்லாம்..நாம பாட்டுக்கு குப்பை தொட்டில் கொட்டுவதுபோல் எல்லா நச்சு கற்றையும் வானில் விட்டு விடுகிறோம்..அது நமக்கே பதகமாய் அமைக்கிறது..."
என்று அரவிந்த் கூற ஹுதய்ஃபாவிற்கு அதன் சீரியஸ்னஸ் என்னவென புரிந்தது..
கார் லேபின் முன் நிற்க இருவரும் இறங்கி உள்ளே சென்றனர்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top