கவிதை 159

அழகுப்பாவை அவள் பூவை போல பறித்த என் இதயத்தை தூக்கி எரிந்துவிட்டாள் வாடிப் போனது என் இதயப்பூ.  

சிறைபட்ட இதயத்தில் சிதறாத உன் நினைவு அலைகள் நிதமாய் என்றும் உயிர்வாழ்கின்றன நீ பிரிந்தாலும் உன் நினைவு என நெஞ்சில் என்றும் நிலையாய் வாழுமடி. 

பழகிய நெஞ்சங்கள் பிரிகின்ற நேரங்கள் எண்ணத்தில் நெஞ்சத்தில் எண்ணற்ற பாரங்கள் உன் பிரிவில். 

இது நிரந்திர பிரிவில்லையே என மனதை தேற்றினாலும் தவிர்க்க முடியவில்லை நிரந்தரமாய் பிரிந்து விட்டாய் என்ற மனதின் ஓசையை.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama