கவிதை 143

நில்லாத ஓடையாய் உன் கைப்பிடித்து ஓடுகின்றேனே. ஆலகால நஞ்சு பாய்ந்தது மெல்ல மீள்வோமே. பிள்ளை தெய்வம் மண்ணில் தோன்றிட வாழ்வை நீள்வோமே...!

நீல வானம் மாய்ந்த போதும் நீ இருப்பாயே. தேவகானம் தூய மௌனம் நீ கொடுப்பாயே. பொல்லாத தோள்களில் உன் வேர்வையாக பூத்திருப்பேனே....!

கனிவாய் பேசு கடிந்து பேசாதே மனம் காயப்பட்டு விடும்...!

மௌனமாக இருப்பவரை விட எப்போதும் பேசிக் கொண்டே இருப்பவருக்கு தான் சொல்ல முடியாத வலிகள் அதிகம்...!

அன்பின் கொடைவள்ளல் அன்னை
மட்டுமே, வாரி வழங்க மறுப்பதேயில்லை
வெறுப்பதுமில்லை...!

  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama