கவிதை. 112

இலைகளின் நுனிகளில் பெருமழையின் மிச்சங்கள் போல் பிரிவிற்கு பின்னும் சில நினைவுகள்.

வரவேற்பு விழாவிற்கு பொறாமையை அழைத்தேன் சுற்றமும் நட்பும் சூழ வருந்துங்கள் என்றது வாழ்த்துக்களாய்.

முதலாய் வைத்த முச்சந்திப் பிள்ளையார் சிலையிடம் வேண்டினான் உன்னை யாரும் களவாடாமல் பார்த்துக் கொள் என.

பொய்யாவது சொல் பூங்காற்றே உற்றவள் இதயத்தே உறைவது நானென.

விதைப்ப தெல்லாம் அன்பென்றால் சுற்றமெல்லாம் உறவுகளே.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama