ஆயுதா 16
அந்த இரு சக்கர வாகன சத்தம் யாரையோ இடித்து விட கூடாது என்று பிரேக் போட்ட சத்தம். எல்லோரும் அங்கு திரும்பி பார்க்கையில் ஒரு இருசக்கர வாகனத்தில் முன் பின் என இருவரும் எதிரில் கண்களை மூடி கைகளால் காதுகளையும் மூடி கைகளில் இருந்த அத்தனை புத்தகங்களையும் கீழே போட்டுவிட்டு பயந்து போய் நின்ற ஒரு பெண்ணின் முதுகுப்புறம் தெரிந்தது ம்ரித்யுவிற்கு. அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரில் பின்னாடி அமர்ந்திருந்தவன் இறங்கி விட்டான். முன்னே இருந்தவன் அறிவிருக்கா இல்ல யாருக்காச்சும் கடன் குடுத்துட்டியா. இப்படி வந்து வண்டி முன்னாடி விழற. ஏதாச்சும் ஆச்சுன்ன நான் போய் ப்ரின்ஸி போலீஸ் கேஸ் ன்னு அலையை முடியாது. லூசு போல வர. கண்ணு கின்னு தெரியுமா இல்ல அதுவும் நொல்லையா. காதச்சும் கேக்குதா. என்று சார மாறியாக திட்டிக்கொண்டிருந்தான். அவள் இன்னும் பயந்து அதில் உடல் நடுங்கி அவன் முன் என்ன பேசுவதென்று தெரியாமல் அழ ஆரபித்து இருந்தாள். சுற்றி இருந்த அனைவரில் யாரும் வாயை திறக்க கூட இல்லை. ம்ரித்யு அங்கு விரைந்து வந்தான். ஏண்டா அந்த பொண்ணு பயந்துட்டா போல நீ வேற திட்டிட்டு இருக்க விடுடா அதான் இடிக்கலேல என்று பேசலானான். அவளின் நடுக்கம் குறையவும் இல்லை அவளின் நின்ற கோணம் மாறவும் இல்லை. எல்லோரும் போங்க போங்க என்று அனைவரையும் அப்புறப்படுத்திவிட்டு அவளிடம் வந்தான். அவளை கண்டவுடன் அவனின் கண்கள் விரிந்தன. உடலில் ஏற்பட்ட ரசாயன மாற்றம், உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை ரத்தம் சீறிப்பாய்ந்து. சுர்ர்ர்ர்ர்ர்ர் என்று ஒரு ஈர்ப்பு அதில் அவனது மயிர்க்கால்கள் கூர்ச்சலிட்டன. சொல்லொணா சந்தோஷம் கண்களில் கண்ணீரை வர வழைத்தது. அவனுக்கு என்ன என்றே சொல்லத்தெரியவில்லை. அப்படி ஒரு மாற்றம் அவனுள் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் கண்கள் அவளை விட்டு அகல வில்லை. அவள் இவனிடம் தேங்க்ஸ் என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள். அவன் அந்த இடத்திலேயே சிலையாக நின்றுவிட்டான். தன்னுடைய இத்தனை வருட காத்திருப்புக்கு பலன் கிடைத்து விட்டதாகவே எண்ணினான்.
எங்கே இருந்தாயாடீ இத்துணை நாட்களாக,
உன்னவனின் மனம் நோக உன்னால் இயலவில்லையே ஓடி வந்தாயோ,
பெண்ணென்று உன்னை கையில் ஏந்தி
இந்த உலகில் வலம் வர துடிக்கின்றதடீ நெஞ்சம்,
புரிந்துகொள்ளடி என் காதலை,
கொல்லாதேடீ உன் பார்வையால்
என்று ஏதேதோ பாட்டு வரிகளை முணுமுணுத்தபடி நின்றிந்தான். அவனுடன் இருந்த நண்பர்கள் அவனை வந்து அசைத்து டேய் டேய் ம்ரித்யு என்னடா மச்சீ கவித கவிதையா பொழியர, இப்படி சிக்கிட்டியேடா. என்று கிண்டல் செய்ய தொடங்கி விட்டனர். அந்நேரம் அங்கே மாயா வந்து விட்டாள். எல்லோரும் இவளை தான் அவனுடன் சேர்த்து கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்து வெட்கம் கொண்டு வா ம்ரித்யு போலாம் கேன்டீனுக்கு எனக்கு பசிக்குது என்றாள். ஏண்டீ வீட்லேந்து தானே வர சாப்பிட்டு வர கூடாது. இப்போ வந்து என்ன தொல்லை பண்ணிட்டு இருக்க என்று சீறினான் அவளிடம். அவனுக்கு அவன் கவலை. இல்ல மாமா அம்மா தான் உன்னோட போய் சாப்டுக்க சொன்னாங்க, நீ சாப்பிடாம வந்திட்ட அவங்க எனக்கும் சோறு போடல என்றாள் வருத்தமாக, அவன் பெருமூச்சிட்டு சரி வா நீங்களும் வாங்கடா சாப்பிடலாம் என்று கேன்டீனுக்கு சென்றார்கள். ம்ரித்யுவின் கண்கள் அவள் சென்ற பாதையிலேயே பதிந்தது. பாரதி அவனது பள்ளி சிநேகிதன். இத்தனை வருட காலமாக அவனுடனேயே சுற்றி வருபவன். யாரிடமும் அனாவசியமாக பேசவும் மாட்டான், வம்பு தும்பிற்கும் செல்ல மாட்டான். நல்ல பையன். என்னடா மாப்ள கண்ணு எங்கயோ போகுது எங்க போகுது என்று வினவ, அதல்லாம் ஒண்ணுமில்ல மச்சி சும்மா தான். டேய் உன்ன பத்தி எனக்கு தெரியாதா. ஒண்ணுமில்லடா விடேன். டேய் கத்திரிக்கா இருக்குல்ல கத்திரிக்கா அது முத்தான கடை வீதிக்கு தாண்டா வரணும் என்று சிரித்தான். உடனே மாயா என்ன கத்திரிக்கா என்றாள் ஹ்ம்ம் எண்ணை கத்திரிக்கா என்றான் அலட்சிய தொனியில். கேன்டீனில் ஓடிய பாட்டு அவனுக்கென்றே போட்டார் போல இருந்தது.
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
மாயா எல்லாவற்றையும் தனக்கானதாக நினைத்துக்கொண்டாள். இதனால் பின் விளைவுகள் யார் யாரெல்லாம் சந்திக்க போகின்றார்கள் பார்க்கலாம்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top