9
எப்படியாவது அரியனையை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் வளவனின் மனதினில் வேரூன்றியது . அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவன் தயாராக இருந்தான் . நேரடியாக மோதி இதை சாதிக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்த அவன் ஒரு சதித்திட்டத்தை தீட்ட ஆரம்பித்தான் .
அவனின் முதல் எதிரி அரசன் ராஜசிம்மன்தான் என்றாலும் அவன் அருகில் கூட யாரையும் நெருங்கவிடாமல் அரசனை அரனாக காக்கும் விஷ்ணுவர்மனின் மேல்தான் அவனின் கோபம் இப்போது திரும்பியது . முதலில் விஷ்ணுவர்மனை அரசனிடம் இருந்து பிரிக்க வேண்டும் என முடிவெடுத்தான் .
ஆனால் இருவரும் அரசர் சேனாதிபதி என்ற முறையைத்தாண்டி ஆத்ம சிநேகிதர்களாக இருப்பதால் இது சாத்தியமா என்ற ஐயமும் மனத்தினில் எழுந்தது.
அதை எப்படி செயலாற்றுவது ? , என்ன செய்தால் இவன் அரசனை விட்டு பிரிவான் என யோசித்துக்கொண்டிருக்கும்போது அன்றொரு நாள் சிவாலயத்தில் ராஜசிம்மன் விஷ்ணுவிடம் கூறியவை நினைவில் மோதின .
“விஷ்ணுவர்மா இந்த கோவிலில் உள்ள சிவபெருமானின் லிங்கத் திருமேனி மரகதத்தால் ஆனது . அது இந்த கோவிலுக்கு மட்டுமல்ல நம் தேசத்திற்க்கே கிடைத்த அரிய பொக்கிஷம்” . அதை நம்மிடமிருந்து பறிக்கத்தான் அந்த வரகுணன் நம்மீது போர்த்தொடுத்தான் எனவும் , பொதுவாகவே சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரக்ஷ்ன ஷக்தி உண்டு . அந்த வகையில் மரகதத்தை லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெற முடியும் . மரகதத்தால் ஆன லிங்கத்திற்க்கு தோஷங்களை நிவரத்தி செய்யும் வல்லமையும் அந்த லிங்கம் இருக்கும் தேசத்திற்க்கும் தேசத்தின் அரசனுக்கும் செல்வ அபிவிருத்தி , நீண்ட ஆரோக்கியம் கிடைக்கும் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது.
அதுமட்டும் அல்லாமல் நமது ஆலயத்தில் உள்ள லிங்கம் இந்திரதேவனால் வழிபட்டது என்று என் பாட்டனார் என்னிடம் கூறியுள்ளார் . ஆகையாலேயே இதை நம்மிடம் இருந்து கவர எதிரிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர் “ என கூறிய ராஜசிம்மனின் வார்த்தைகள் அவன் மனதில் நிழலாடின .
இதைத் தொடர்ந்து விஷ்ணுவர்மன் பேசியதும் அவனுக்கு நினைவில் உதித்தது . “ தாங்கள் இதைப்பற்றி இனி கவலை கொள்ள வேண்டாம் அரசே . இனி இந்த லிங்கத்தை காக்க வேண்டியது என் பொறுப்பு . நம் ஆலயத்திலிருந்து இந்த லிங்கத்தை எடுத்துச்செல்ல நான் விடமாட்டேன். என் உயிர் உள்ளவரை நான் அதைப் பாதுகாப்பேன்” என அரசனிடம் விஷ்ணுவர்மன் வாக்களித்ததும் நினைவிற்க்கு வந்தது. .
இந்த நிகழ்வு தனக்கு ஞாபகம் வந்தவுடன் “ அடாடா இந்த விஷயத்தை எப்படி மறந்தேன் . இந்த எண்ணம் எனக்கு ஏன் இத்தனை நாள் தோன்றாமல் போய்விட்டது “ என நினைத்தவன் தன் மனதினில் தோன்றிய திட்டத்தைச் செயல்படுத்த தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் .
அவன் எதிர்பார்த்திருந்த நாளும் கூடிய விரைவில் தானாகவே வந்தது . ஒருநாள் அரசவை கூடியபொழுது அந்த செய்தி வந்தது . அரசவையுனுள் நுழைந்த காவலாளி “ அரசே தங்களைக் காண நமது அண்டைதேசமான அங்க தேசத்திலிருந்து வந்துள்ளனர் “ என கூறினான் .
“ அவர்களை வரச்சொல் “ என ஆணையிட்ட மன்னன் அவர்கள் வந்து தன் வணக்கத்தை தெரிவித்தவுடன் அவர்கள் வந்த விஷயத்தைப்பற்றிக் கூறச் சொன்னான் .
வந்தவர்கள் “ அரசே எங்களது நாட்டில் திருவிழா நடக்க இருப்பதால் எமது அங்க நாட்டு அரசர் தங்களிடம் விழாவிற்க்கான அழைப்பிதழை அனுப்பி வைத்திருக்கிறார் . தானே நேரில் வந்து அழைத்ததாக கருதி விழாவிற்க்கு தவறாமல் வருகை புரியவேண்டும் என்றும் கூறச்சொன்னார் “ என உரைத்தான் .
அதைக்கேட்ட ராஜசிம்மன் கட்டாயம் விழாவில் கலந்துகொள்வதாக வாக்களித்தான் . பிறகு மரியாதை நிமித்தமாக பதில் ஓலையை எழுதி அவர்களிடம் கொடுத்தனுப்பினான் .
அன்று இரவு விஷ்ணுவர்மனை வரச்சொன்ன அரசன் தான் அங்க தேசத்திற்க்கு நாளை காலை கிளம்புவதாக கூறினான் .
அதைக்கேட்ட விஷ்ணுவர்மன் “ அரசே நானும் தங்களுடன் வருகிறேன் “ என கூறினான் .
உடனே ராஜசிம்மன் "தேவையில்லை விஷ்ணுவர்மா நீ நான் வரும்வரை இங்கேயே இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள் " என்றான் .
“ இருந்தாலும் அரசே , சிறிது நாட்களுக்கு முன்னர்தான் கானகத்தில் ஒரு அசம்பாவிதம் நடக்க இருந்தது .தங்களை எப்படி தனியே அனுப்புவது. “ என ஐயத்துடன் வினவினான் விஷ்ணுவர்மன் .
“ கவலைக்கொள்ளத் தேவையில்லை விஷ்ணுவர்மா , நம் வீரர்கள்தான் என்னுடன் வருகின்றரே … அத்துடன் அங்கதேச மன்னன் என் பால்ய சிநேகிதன் கண்டிப்பாக இந்த வைபவத்திற்க்கு நான் சென்றே ஆகவேண்டும் . மேலும் எனக்கு அங்கு எந்த ஆபத்தும் நேராது . நான் பார்த்துக்கொள்கிறேன் “ என கூறினான் .
இதற்கு மேலும் ஏதும் மறுத்துப் பேச விஷ்ணுவர்மனால் இயலவில்லை "தங்கள் உத்தரவு அரசே"என்று கூறி அங்கிருந்து விடைபெற்றான் அவன் .
மறுநாள் பொழுது புலர்ந்தவுடன் அரசன் ராஜசிம்மன் தான் மூன்று நாட்கள் கழிந்தவுடன் நம் தேசத்திற்க்கு திரும்பிவிடுவதாக அமைச்சர்களிடமும் விஷ்ணுவிடமும் கூறினான் . பின்பு அரசன் ராஜசிம்மனும் அவனுடன் சில வீரர்களும் அங்கதேசத்திற்க்குப் புறப்பட்டனர் .
இந்த அரிய சமயத்தை பயன்படுத்திக் கொள்ள வளவனின் மனம் துடித்தது . அவன் யோசித்து வைத்த திட்டத்தை கூடிய விரைவில் தக்க தருணத்தில் செயல்படுத்த எண்ணினான் .
ராஜசிம்மன் அங்க தேசத்திற்க்கு சென்று இரண்டு நாள் கழிந்து விட்ட அந்த மூன்றாம் நாளின் அர்த்த சாம இராத்திரி நேரத்தில் விஷ்ணுவர்மனின் உடையைப் போலவே தான் தயாரித்து வைத்திருந்த உடையை அணிந்துகொண்டான் . முகத்தைமட்டும் ஒரு துனியால் கண்கள் மட்டும் தெரியும்படி மூடிக்கொண்டான்.
அவனின் கால்கள் நேராக சிவாலயத்தை நோக்கி பயணித்தது . கோவிலை வந்தடைந்தவன் கருவறையில் இருக்கும் மரகத லிங்கத்தை நோக்கினான் . அதை பார்த்தவன் “ என் தமையன் உன்னை உயிர்ப்போல் நேசிக்கிறான் அல்லவா ? இனி உன்னை வைத்தே காய்களை நகர்த்தி நான் கொண்ட சபதத்தில் வெற்றி அடைகிறேன் “ என கருவினான் .
அந்த லிங்கத்திருமேனியை அதன் பீடத்திலிருந்து மிகப்பிரையாசைப்பட்டு தகர்த்தான் . பின்பு அந்த லிங்கத்தை தன் கரங்களால் எடுத்தவன் அதைத் தன் தோளின் மீது வைத்தான் .
பின்பு கோவிலில் இருந்து வெளிவந்தான் வளவன் . அப்படி வெளியே வந்தவனை அக்கோவிலின் காவல்காரன் பார்த்துவிட்டான் . வளவன் தரித்திருந்த உடையும் அணிகலன்கலும் அச்சுஅசல் விஷ்ணுவர்மனைப்போலவே இருந்ததால் அந்த காவல்காரனும் அவனை விஷ்ணுவர்மன் என்றே நினைத்துவிட்டான் .
“ சேனாதிபதியாரே ! சேனாதிபதியாரே ! என அழைத்துக்கொண்டே சுவாமி சிலையை எங்கே எடுத்துக்கொண்டு செல்கிறீர்கள் என்று கூறியபடி பின்னாலேயே ஓடினான் . நன்றாக உடற்பயிற்ச்சி செய்து உடம்பை பலமாக வைத்திருந்த வளவனால் அந்த லிங்கத்தை தோளில் சுமந்துகொண்டே வேகமாக ஓடுவது அப்படி ஒன்றும் கடினமான காரியமாக இருக்கவில்லை . பிறகு என்ன நினைத்தானோ திடீரென்று ஓரிடத்தில் நின்றான் . பிறகு தன்னை துரத்திக்கொண்டு ஓடிவரும் காவலாளியைக் கண்டவன் அவன் அருகில் வந்தவுடன் முகத்தின்மேல் ஓங்கி குத்தினான் . காவலாளியோ அவ்விடத்திலேயே மயங்கிச் சரிந்தான் .
இதற்க்குள் மற்ற காவலர்களும் முதல் காவலன் போட்ட சத்தத்தில் அங்கே குழுமினர் . அவர்ககளையும் வளவன் விட்டுவிடாமல் மயக்கம் வரும் வரை அடித்துச் சாத்தினான் . முகமூடி அணிந்திருந்த காரணத்தினால் வளவன்தான் என்று யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது . தங்களை அடித்ததும் சிலையை கடத்தியதும் விஷ்ணுவர்மன்தான் என எண்ணினர் .
மறுநாள் பொழுது புலர்ந்தவுடன் மிகச்சோம்பலாக புலர்ந்து பல திருப்பங்களைத் தர காத்திருந்தது . அங்கதேச திருவிழா வைபவத்தில் கலந்து கொண்டு தன் தேசத்திற்க்கு திரும்பிய ராஜசிம்மனுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது .
மரகத லிங்கத்தை காணமல் போனது முதல் அதிர்ச்சி எனில் , அந்த மரகத லிங்கத்தை களவாடிய குற்றம் விஷ்ணுவர்மனில் மேல் சுமத்தப்பட்டது அடுத்தகட்ட அதிர்ச்சியாக இருந்தது . எப்படி இது சாத்தியம் ? . எப்படி இப்படி நடந்தது ? என்ற கேள்வியே அவனின் மனத்தினை அரித்துக் கொண்டிருந்தது .
அரசவையில் சிங்காதனத்தில் அமர்ந்திருந்த ராஜசிம்மன் சிவாலயத்தின் காவலாளியை அழைத்து விசாரித்தான் . “ அரசே நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளையில் ஏதோ சப்தம் கேட்கவே திடுக்கிட்டு எழுந்தேன் . எழுந்து பார்த்தால் கோவில் கதவு திறந்திருந்தது . பின்பு வாசல் பக்கமாக ஏதோ நிழலாடியது போல் இருந்ததால் நான் பதட்டமடைந்து கோவிலின் வாயிலருகே சென்றேன் . அதற்க்குள் அந்த உருவம் வாயிலில் இருந்து வெளியே வந்தது . பார்த்தவுடன் எனக்கு அதிர்ச்சியில் நாவே எழவில்லை அரசே . நம் சேனாதிபதியார்தான் நம் சுவாமியின் திருவுருவத்தை தன் தோளில் சுமந்து கொண்டு வந்தார் . நான் அவரை அழைத்ததும் திரும்பி என்னைப்பார்த்தவர் என்னை அடித்து விட்டார். நான் அந்த இடத்திலேயே மயங்கி விட்டேன் “ என கூறினான் . மேலும் தான் மயங்கி விழும்போது அவ்விடத்தில் இருந்த விஷ்ணுவின் மோதிரத்தையும் அரசனிடம் கொடுத்தான் அந்த காவலாளி .
அந்த மோதிரத்தைப்பார்த்த வளவன் தனக்கள்ளேயே சிரித்துக்கொண்டு அன்று நடந்ததை நினைத்துப்பார்த்தான் .
சம்பவம் நடந்த அந்த நாளில் சிறிது நேரத்திற்க்கு முன்னர் யாரும் அறியா வண்ணம் விஷ்ணுவர்மனின் அறைக்குள் நுழைந்தன் வளவன் . அவ்வறையில் அப்பொழுது யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டான் . பின்பு விஷ்ணுவர்மனின் படுக்கையின் அருகில் இருந்த மேசையில் விஷ்ணுவர்மனின் கைவிரல்களில் எப்போதும் தவழும் மோதிரம் இருந்தது . அதை ராஜசிம்மனே விஷ்ணுவர்மனிற்க்கு பரிசாக அளித்திருந்தான் .
அந்த மோதிரத்தைப்பார்த்ததும் ராஜசிம்மனின் அதிர்ச்சி பன்படங்கு அதிகமானது . விஷ்ணுவர்மனின் மேல் குருட்டு நம்பிக்கை வைத்துவிட்டோமோ என எண்ணி வருத்தமடைந்தான் .
ராஜசிம்மன் விஷ்ணுவர்மனின் புறம் தன் பார்வையை திருப்பினான் . விஷ்ணுவர்மா என்ன இதெல்லாம் ? உன் மீது அளவிற்க்கு அதிகமாக நம்பிக்கை வைத்திருந்த என்னையே ஏமாற்றிவிட்டாயே என கருவினான் .
“ அரசே கடவுள் மீது சத்தியமாக இதை நான் செய்யவில்லை . சம்பவம் நடந்த அன்று நான் என் அறையில்தான் இருந்தேன் . இவர்கள் ஏன் இப்படி என் மேல் பழி சுமத்துகிறார்கள் என நான் அறியேன் “ என உரைத்தான் .
“ அப்படி என்றால் நான் உனக்கு பரிசாக அளித்த மோதிரம் எப்படி அவர்களிடம் சென்றது . எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது அது நான் உனக்களித்த மோதிரம்தான் அதில் எள்ளளவும் சந்தேகமில்லை . இது எப்பொழுதும் உன் கைகளில்தானே இருக்கும் இன்று எப்படி அவர்களிடம் சென்றது “ என சினம் கொப்பளிக்க விஷ்ணுவிடம் கேட்டான் ராஜசிம்மன் .
“ அரசே அதுதான் எனக்கும் விளங்கவில்லை நான் அதை என் அறையில்தான் கழற்றி வைத்தேன் . திரும்பிவந்து பார்த்தால் அது அவ்விடத்தில் இல்லை . எப்படி மாயமானது என்று எனக்கு விளங்கவில்லை அரசே “ என கூறினான்.
இதற்க்குள் இடையில் புகுந்தது வளவனின் குரல் . “ அரசே குற்றவாளி இவன்தான் என்று ஆதாரத்துடன் ஊர்ஜிதமாகிவிட்டதே ! இனி இவனின் வாதத்தைக்கேட்டு என்ன பயன் . இவன் அந்த சிலையை எங்கே வைத்திருக்கிறான் என கேளுங்கள் “ அரசே “என கூறினான் .
ராஜசிம்மனும் விஷ்ணுவர்மனிடம் “ விஷ்ணுவர்மா உன் மேல் நான் வைத்திருந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துவிட்டாய் . மரியாதையாக சொல் அந்த லிங்கத்தை எங்கே வைத்திருக்கிறாய் “ என கோபத்துடன் கேட்டான் .
“ அரசே நான் சொல்வது அனைத்தும் உண்மை . நான் நிஜமாகவே யாதொரு தவறும் செய்யவில்லை . அந்த சிவலிங்கத்தை பாதுகாப்பேன் என்று சொன்ன நானே அதை எப்படி களவாட முடியும் ? “ என கூறினான் .
“ அதைத்தான் நாங்களும் கேட்கிறோம் . எப்படி உன்னால் அதை செய்ய முடிந்தது . எதிரி நாட்டு மன்னனுடன் கூட்டு சேர்ந்து அந்த லிங்கத்தை களவாடி , நீ அவர்களுக்குத்தான் விசுவாசமானவன் என்பதை நிரூபித்து விட்டாய் “ என வளவன் தன் பங்கிற்க்கு எரியும் தீயில் நெய்யை ஊற்றினான் .
ராஜசிம்மனுக்கும் வளவன் கூறியது உண்மையாக இருக்கக்கூடுமோ என்ற ஐயம் மேலோங்கியது . விஷ்ணுவர்மன் எதிரிநாட்டு மன்னனுக்கு விலைபோயிருப்பானோ என்ற எண்ணம் தோன்றியது .
“ விஷ்ணுவர்மா உனக்கு இறுதி எச்சரிக்கையை விடுக்கிறேன் .... உண்மையைக்கூறிவிடு இல்லையெனில் கடும் விளைவுகளை நீ சந்திக்க நேரிடும் “ என்ற எச்சரிக்கையை விடுத்தான் ராஜசிம்மன் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top