13
காலைக்கதிரவன் தன் மரகத மஞ்சள் நிற கரங்களை நீட்டி இவ்வுலக உயிர்களை எல்லாம் தன் இளஞ்சூட்டால் ஆரத்தழுவியிருந்த அந்த அழகான விடியற்காலைப் பொழுதில் விஷ்ணு தனதறையில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான் . ஒரு சில நாட்களாக சரியான உறக்கம் இன்றி தவித்தவனுக்கு இப்பொழுதுதான் நிம்மதியான தூக்கம் கிட்டியது .
நேற்றைய தினத்தின் இரவில் வேதாவைச்சந்தித்துவிட்டு தனதறைக்கு வந்தவன் அன்றைய தினம் தன் வாழ்வில் ஏற்பட்ட இருமாறுபட்ட முக்கியமான நிகழ்வுகளை நினைத்துப்பார்த்தான் . நினைக்கவே மலைப்பாக இருந்தது . ஒன்று தன் முன்ஜென்ம நிகழ்வினை அறிந்துகொண்டது . மற்றொன்று தன் காதலை வேதாவிடம் வெளிப்படுத்தியது . இரண்டுமே அவன் மனத்தினில் இதுநாள் வரை குழப்பத்தை விளைவித்த விஷயங்கள் . இன்றோ இவையிரண்டிற்க்குமே தக்க விடை கிட்டியதால் மனம் லேசானது போல இருந்தது .
" எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மரகதலிங்கத்தை தேடிக்கண்டுபிடித்துவிடவேண்டும் " என எண்ணி படுக்கையில் சரிந்தான் . படுத்தவுடன் அன்றைய தின அயர்ச்சி அவனை உறக்கம் எனும் மாயா லோகத்திற்க்கு சுற்றுலா அழைத்துச்சென்றது .
கனவுகளற்ற அற்புதமான அந்த உறக்கம் எனும் லோகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தவன் திடீரென தன் மீது பொழியப்பட்ட நீரால் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தமர்ந்தான் . அடிவயிற்றிலிருந்து கோபம் கொந்தளிக்க " வாட் த ஹெல் ... டாமிட்....இடியட் யாருடா தண்ணி ஊத்தினது" என திட்டிக்கொண்டே முகத்தில் வழிந்த நீரை தன் கைகளால் துடைத்தெறிந்துவிட்டு கண்களைத் திறந்தான் .
தனது எதிரில் கையில் தண்ணீர் வாளியுடன் நிற்க்கும் ராமைப்பார்த்து " இடியட் என்னடா பண்ண இப்போ ? . நிம்மதியா தூங்க கூட விடாம டார்ச்சர் பண்றியே ! உருப்படுவியாடா நீ ! " என ஆத்திரத்தில் கத்தினான் .
" டேய் கத்தாதடா ! நான் உன்கிட்ட நேத்து என்ன சொன்னேன் ? இன்னைக்கு மார்னிங் ஒரு இடத்துக்கு போறோம் . சீக்கிரம் ரெடியாகுன்னு சொன்னேனா இல்லையா ? அதான் உன்னை எழுப்ப வந்தேன் " என கூறிய ராமை பார்த்து முறைத்துக்கொண்டே " அதுக்கு இப்படியா தண்ணி ஊத்துவ ! சாதாரணமா எழுப்பியிருக்கலாம்ல " என்றான் விஷ்ணு .
" அடப்பாவி ... உன்னை எவ்வளவு நேரம் தெரியுமா எழுப்பினேன் ! நீ பாட்டுக்கு கும்பகர்ண சேவகம் செஞ்சிட்டு இருந்த . சரி இது வேலைக்கு ஆகாதுன்னு வாட்டர் ட்ரீட்மென்ட் ஃபாலோவ் செஞ்சேன் . பரவால்ல எவ்வளவு சூப்பரா வொர்க்கவுட் ஆகுதுல " என நமட்டுச்சிரிப்புடன் கூறினான் ராம் .
அப்படிக்கூறிய ராமை நோக்கி " அடப்பாவி ... கிராதகா ...ஓடிடு இங்க இருந்து ... என்றவன் . திடீரென நினைவு வந்தவனாக " மச்சி ... உங்க ஃபேமிலி ஃப்ரண்ட் ராஜீவ்னு ஒருத்தர் வந்தாருல்ல ... அவர் கிளம்பிட்டாரா ? " என கேட்டான் விஷ்ணு .
" இல்லைடா... இன்னும் போகலை இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு தான் போவான்னு அப்பா சொன்னாரு . எதுக்கு கேக்கறடா ? " என வினாவினான் ராம் .
" ஒன்னும் இல்ல சும்மா தான் கேட்டேன் " என்ற விஷ்ணுவிடம் " சரி சரி சீக்கிரம் கிளம்பு ... டைம் ஆகிடுச்சுடா ! " என்று அவனை கிளப்பினான் ராம் . " அடடா இவன் கூட ஒரு தொல்லையாப்போச்சே ! இவன் இப்போ வெளியே கூப்பிட்டு போனான்னா , நாம எப்போ அந்த லிங்கத்தை தேட போகறது ? " என நினைத்தான் .
" டேய் எங்கடா போறோம் ? இன்னொரு நாள் போலாமே ... கண்டிப்பா இன்னிக்கு போயே ஆகனுமா ? "
" பிச்சிடுவேன் இன்னைக்கு கண்டிப்பா போயே ஆகனும் . நீ வந்து பாரு ... உனக்கே அந்த இடம் ரொம்ப பிடிச்சிடும் . அதுமட்டும் இல்லைடா . வேதாவும் பாவம் இங்க வந்ததில இருந்து வெளியவே போகலை வீட்டுக்குள்ளையே சுத்திட்டிருக்கா . அவளுக்காகவாவது நாம போயே ஆகனும் . ப்ளீஸ் மச்சி " என கெஞ்சினான்.
வேதாவின் பெயரை எடுத்தவுடன் ராமின் கோரிக்கையை நிராகரிக்க முடியாத விஷ்ணுவும் " சரி வரேன்டா ... நீ போய் கிளம்பு ... நானும் போய் ரெடியாகுறேன் " எனக் கூறி கட்டிலில் இருந்து எழும்பினான் .
" ஹ்ம்ம் ஓகே ... நான் காஃபி கொடுத்து அனுப்புறேன் . குடிச்சிட்டு ரெடியாகிடு ... சரியா ? " எனக் கூறியவன் அங்கிருந்து கிளம்பினான் .
ராம் அங்கிருந்து கிளம்பிய ஐந்து நிமிடங்களில் வேலைக்காரன் மூர்த்தி ஒரு ட்ரேயில் காஃபி கப்புடன் விஷ்ணுவின் அறையினுள் நுழைந்தார் . அவரைப்பார்த்தவுடன் அவரிடம் இருந்து காஃபியை வாங்கியவனுக்கு அன்றொருநாள் அவர் குன்றைப்பற்றி சொன்னது மனத்தினில் நிழலாடியது .
அவர் கூறியதை நினைத்துப்பார்த்து ஒரு பெருமூச்செறிந்தவன் பொய்க்குத்தான் உண்மையை விட எவ்வளவு கவர்ச்சி இருக்கு . இத்தனை இத்தனை ஜென்மமா அந்த கதையும் வாய்மொழியா நம்பப்பட்டு வருதே என வருத்தம் கொண்டான் . அதையே நினைத்து பிரயோஜனமில்லை இனி ஆக வேண்டிய வேலையைப் பார்ப்பதே உத்தமம் என்று எண்ணியவன்
பிறகு வெளியே செல்வதற்க்கு தயாரானான் .
அதற்க்குள் வேதாவும் , ராமும் கீழே ஹாலிற்க்கு வந்து விஷ்ணுவிற்க்காக காத்திருக்கத் தொடங்கினர் . கருப்பு நிற ஷார்ட் காட்டன் குர்தி , வெளிர் நீல ஜீன்ஸ் , காதில் குட்டி ஸ்டட், தோள் வரை அழகாக பரந்து விரிந்திருந்த குழல் என அளவான ஒப்பனையில் அழகாக கண்களை உருட்டி ராமிடம் பேசிக்கொண்டிருந்தவள் வெள்ளை நிற டிஷர்ட் , நீல நிற ஜீன்ஸ் ,அதற்க்கு தோதான ஷு , கைவிரல்களில் சுழலும் கூலிங்க்ளாஸ் , கோதுமை நிற நெற்றியில் வந்து விழும் கற்றை முடி , அதை அலட்சியமாக கோதி விடும் நீண்ட கைகள் , மதுவும் புகைபழக்கமும் அறியாத அதரங்களில் தவழும் புன்னகை , என ஸ்டைலாக மாடியிலிருந்து இறங்கிவந்த விஷ்ணுவினைப் பார்த்து ஒரு கனம் ரசித்தவள் பின் தன்னைச்சுதாரித்துக்கொண்டு ராமிடம் " ராம் ..., அங்க பாரு ... உன் ஃப்ரண்ட் வந்துட்டாரு ... இப்பவாவது கிளம்பலாமா ? " என கேட்டாள் .
" ஓ .... கிளம்பலாமே ... மஹாராஜா வந்த பிறகு எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணணும் . வாங்க வாங்க போகலாம் " என குதூகலமாக கூறியவனை தடை செய்தது விஷ்ணுவின் குரல் . " ராம் ... ஒரு நிமிஷம் இரு , ராஜீவ் இப்போ சும்மாதானே இருப்பாரு ?அவரையும் கூட்டிட்டு போகலாமா ? அவருக்கும் நம்ம வயசுதானே ? இங்க இருந்து அப்பா கூட என்ன பண்ண போறாரு ? " என கேட்டவனிடம்
" டேய் அவன் கூட நான் சரியா கூட இதுவரை பேசினதில்லைடா ... பழக்கமே இல்லடா ... மோர்ஓவர் இது நம்ம வரையும் இந்த நாளை ஹாப்பியா ஸ்பென்ட் பண்ண நான் ப்ளான் பண்ணிருக்கேன் . இவன் எதுக்குடா அங்க ? " என்று முகத்தைச் சுளித்து கேட்டான் ராம் .
உடனே வேதா " அப்படி எல்லாம் சொல்லக்கூடாது ராம் . அதிதி தேவோ பவ ! கேள்விபட்ருக்க இல்ல ? விருந்தாளிய கடவுளா பாக்கனும் தம்பி ... விஷ்ணுவைப் பாரு எவ்வளவு பொருப்பா பேசறாரு ... அவரைப் பார்த்து கத்துக்கோ ... விஷ்ணு நீங்க போய் ராஜீவ கூப்பிடுங்க . இவனை நான் பாத்துக்குறேன் " என வீரவசனம் பேசினாள் .
அவள் கூறியதைக்கேட்டு சிரித்த விஷ்ணு " ஹ்ம்ம் ... வேதா இருக்க என்ன கவலை ... நீ எல்லாத்தையும் சமாளிச்சிடுவ தாயே ! சரி இருங்க நான் போய் அவரைக் கூப்பிட்றேன் " என்றவன் மாடிப்படிக்கு வலப்பக்கம் இருக்கும் அறையில் தங்கியிருக்கும் ராஜீவை நோக்கிச்சென்றான் .
அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த வேதாவின் தலையை லேசாகத்தட்டிய ராம் " ஏய் ! என்ன நடக்குது இங்க ? பார்த்தா எதுவும் சரியா நடக்கிற மாதிரி தெரியலை . அவனைப் பார்த்தாலே நீ பல்ல பல்ல காட்ற .. ஏற்கனவே அரை லூசா சுத்தற நீ அவனைப்பார்த்தா முழு லூசா மாறிட்ற ... அவன் என்னடானா ஒரு மார்கமாவே திரியுறான் ..நீயே . உண்மைய சொல்லிடு ... நானா கண்டுபிடிச்சன்னா அப்புறம் நடக்கிறதுக்கு நான் பொருப்பு இல்லை " என சிடுசிடுத்தான் .
அவன் கூறுவதைக்கேட்ட வேதா " தலையில அடிக்காத எருமை !நானே சொல்லிட்றேன் . நீதானே சின்ன வயசில இருந்து என் ஃப்ரண்ட் கம் கசின் உன்கிட்ட சொல்லாம இருப்பேனா ! நானே இதைப்பத்தி உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் . ஆக்ட்சுவலி ஐ... ஐ ஃபெல் இன் லவ் வித் விஷ்ணு ... விஷ்ணுவும் தான் .... நேத்துதான் ஹி புரோபோஸ்டு மீ. " என கூறியவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் ராம் .
" அடப்பாவிங்களா…. புரப்போஸலே நடந்துடுச்சா … அப்போவே நினைச்சேன் நான் .... ஃப்ராடுங்களா ! உங்க கூட தானே சுத்திட்டு இருந்தேன் நான் . எனக்கு தெரியாம எப்படிடா ? எது எப்படியோ நீங்க நல்லா இருந்தா போதும்டா " என ஒரு பொருப்புள்ள நண்பனாக கூறினான் அவன் . மேலும் தொடர்ந்த அவன் " சரி எனக்கு இப்போ இந்த மேட்டர் தெரியாத மாதிரியே இருக்கட்டும் . எனக்கு தெரியும்னு நீயும் அவன்கிட்ட சொல்லாத.... என்னோட மத்த ஃப்ரண்ட்ஸ்சும் வந்துடட்டும் அவனை ஒரு வழி பண்ணிட்றோம் " என கூறினான்
அதே நேரம் ராஜீவின் அறையினுள் நுழைந்த விஷ்ணு " எக்ஸ்கியூஸ் மீ , உள்ள வரலாமா ? என வினவினான் . அந்த நேரம் தன் லாப்டாப்பில் மூழ்கியிருந்த ராஜீவ் " ஹாய் ... வாங்க வாங்க ... மிஸ்டர் விஷ்ணு " என்றான் .
அவனருகில் சென்றவன் " ஹாய் ராஜீவ் . இன்னைக்கு நீங்க ஃப்ரீயா ? நாங்க இன்னைக்கு அவுட்டிங் போக ப்ளான் பண்ணிருக்கோம் . ஃப்ரீனா நீங்களும் எங்க கூட ஜாய்ன் பண்ணிக்கோங்களேன் . இஃப் யூ டோன்ட் மைன்ட் " என கூறினான் .
" ஓ... சூப்பர் , கண்டிப்பா நான் வரேன் ... ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க . சீக்கிரம் கிளம்பிட்றேன் " என்றவனின் பதிலில் திருப்தியடைந்தவன் . தன் நண்பர்கள் இருந்த இடத்திற்க்கு வந்து சேர்ந்தான் .
" என்னடா சொன்னான் அவன் ? வரானா இல்லையா ? " என அலட்சியமாக கேட்டான் ராம் . " அவர் வரேன்னுதான் சொல்லிருக்காரு . கொஞ்சம் பொறு கிளம்பிடலாம் " என்று விஷ்ணு கூறினான் .
கூறியது போலவே சில நிமிடங்களில் ராஜீவும் வந்துவிடவே அனைவரும் புறப்பட்டனர் . ராம் கார் ஓட்ட அவன் அருகில் ராஜீவ் அமர்ந்தான் . பின் இருக்கையில் விஷ்ணுவும் வேதாவும் அமர்ந்தனர் . விஷ்ணுவின் மனத்திலோ ராஜீவ் ராஜசிம்மனைப்போலேவே இருப்பதால் ஒரு தனிப் பாசம் வந்துவிட்டது . மேலும் அவன் ராஜசிம்மனை ஒத்த உருவமாக உள்ளதால் அவன் ராஜசிம்மனாக இருந்து அவனுக்கும் பழைய நினைவுகள் வந்திருக்குமோ என்ற ஐயமும் மனத்தினில் உழன்று கொண்டிருந்தது .
கார் விடையூரைத் தாண்டி போய்க்கொண்டிருந்தது . இருமருங்கிலும் அழகிய இயற்க்கைக் காட்சிகள் விரிய அதை ரசித்துக்கொண்டே வந்தனர் . சில நிமிட இடைவெளிக்குப் பின் ஓரிடத்தில் காரை நிறுத்தியவன் அனைவரையும் பார்த்து " எல்லாரும் இறங்குங்க இங்க இருந்து நடந்துதான் போகனும் . கார் உள்ள வர முடியாது . இங்க வர எல்லாரும் நடநதுதான் போவாங்க " எனக் கூறினான் .
அவனின் சொற்படியே இறங்கியவர்கள் ராம் முன்னால் செல்ல அவனைப் பின்தொடர்ந்தனர் . அவர்கள் நடந்து போகும் வழியிலெல்லாம் இயற்க்கை அன்னை தன் தயாள குணத்தை ஏகபோகமாக காட்டியிருந்தாள் .
அந்த இடத்தில் ஏற்கனவே பிக்னிக் வந்த ஒரு சில குடும்பங்கள் அங்கு சுற்றிப்பார்த்த வண்ணம் இருந்தனர் . அந்த இடம் தன்னகத்தே பல தனித்தனியான பிரிவுகளைக்கொண்டு விளங்கியது . சுற்றுலா பயணியரைக்கவர்வதற்க்கென்றே அமைக்கப்பட்டு இருந்ததால் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு இருந்தது அவ்விடம் .
ஒரு அழகான நந்தவனத்தினுள் நுழைந்தவர்கள் அங்கிருக்கும் பல வகையான பூஞ்செடிகளையும் , அதன் நறுமணங்களையும் ரசித்தவாறே சுற்றிப்பார்த்துக்கொண்டு வந்திருந்தனர் .
அப்போது வேதாவின் கவனத்தை அங்கிருந்த ஒரு அழகிய மலர் கவர்ந்தது . வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் இதழ்களும் பிங்க் நிறத்தில் மகரந்தமும் கொண்ட அப்பெரிய மலரை முகரப்போனவளை தடுத்த விஷ்ணு "ஏய்.... வேதா ... என்னமா பண்ற நீ ? இந்த பூ பத்தி இதுக்கு முன்னால கேள்விபட்டிருக்கியா ? இது பேர் என்னன்னு தெரியுமா ? எதுவும் தெரியாதுல்ல ! இப்படி எதுவுமே தெரியாத பூ , செடிங்களை எல்லாம் ஸ்மெல் பண்ணக்கூடாது . சிலது பாய்சனஸ் ஆக கூட இருக்கலாம் . புரியுதா ? " என அறிவுரைக் கூறினான் .
" அடக்கடவுளே ! அட்வைஸ் குருவே ! ஒரு பூக்கு இவ்வளவு பெரிய கதையா ? இனி மல்லிப்பூவக் கூட ஸ்மெல் பண்ண மாட்டேன் குருஜி ! " என நக்கலடித்தாள் அவள் .
இதைக்கேட்டதும் அவளை முறைத்தான் விஷ்ணு . " சரி அமுல் பேபி ! கோச்சிக்காதிங்க ... இனி நான் அப்படி பண்ண மாட்டேன் . போதுமா? கொஞ்சம் சிரிங்க பாஸ் . முறைக்காதீங்க " என கேட்டவளின் தொனியில் சமாதானமடைந்தவன் ராமும் ராஜீவும் அருகில் இல்லாமல் சற்று தூரத்தில் இவர்களுக்கு முன்னால் செல்வதைப் பார்த்தவன் " ஓகே ஓகே வா ராம் கூடவே போகலாம் . அவங்க நம்மலை விட முன்னாடி போய்ட்ருக்காங்க . அவங்க கூட போய் ஜாய்ன் ஆகனும் " என்றான் .
அவன் கூறியவாறே வேகமாக இருவரும் நடந்து சென்றனர் . சிறிது தூரம் சென்றவுடன் அங்கே ஒரு பெரிய மண்டபம் இருப்பதைக் கண்ணுற்றவர்கள் அதனுள் செல்லத்துவங்கினர் .
அதைப்பார்த்தவர்களுக்கு ஏதோ சுவர்க்க புரிக்கு வந்துவிட்டதாகவே தோன்றியது . உத்திரத்தில் தளத்திற்க்கு பதிலாக நீலநிறத்தில் வெள்ளைத்திட்டுக்கள் போன்று அமைத்து வான்வெளி போன்ற தோற்றத்தை உருவாக்கியிருந்தனர் . மேலும் ஆங்காங்கே நட்சத்திரவடிவில் மின்விளக்குகளை பொருத்தி ஒரு மாய லோகத்தையே படைத்திருந்தனர் .
பக்கவாட்டுச்சுவர்களில் ராஜா ரவிவர்மனில் தொடங்கி நந்தலால் போஸின் ஓவியங்கள் வரை மிகவும் நேர்த்தியாக வரிசைப்படுத்தப்பட்டிருந்தன . அந்த சௌந்தரியத்தில் தன்னைத் தொலைத்திருந்த விஷ்ணு எதிரில் வந்தவரின் மீது மோதிவிட்டான் .
இவன் மோதிய வேகத்தில் எதிரே வந்தவன் நிலைத்தடுமாறி கீழே விழுந்தான் . அவசர அவசரமாக அவனுக்கு கைக்கொடுத்து தூக்கிவிட்டவன் அப்பொழுதுதான் அவனின் முகத்தைப் பார்த்தான் .
அங்கே நின்றிருந்தவன் வளவனின் கலர் ஜெராக்ஸ் காப்பி போல இருந்ததால் ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்தான் . அடுத்த நொடியே தன் முகபாவனையை மாற்றியவன் " சாரி சார் .... தெ..தெரியாம இடிச்சிட்டேன் . " என்றான் விஷ்ணு .
" இட்ஸ் ஓகே ப்ரோ ... நோ ப்ராப்ளம் ... பார்த்து போங்க" என்று கூறிய அவன் அங்கிருந்து அகன்றான் . அவன் சென்ற திக்கையே இமைக்கவும் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் விஷ்ணு
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top