போட்டி 9 # 4 மெய் காதல்

குழு அ (ஒரு பெண்ணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்கு முன்:

என்னை ப‌ற்றியே சிந்திக்கிற‌து உன்த‌ன் மூளை;

ர‌க‌சிய‌மாய் என்னை ர‌சிக்கிற‌து உந்த‌ன் க‌ண்க‌ள்;

என் பேச்சை ம‌ணி க‌ண‌க்காக‌ ர‌சித்து கேட்கிற‌து உந்த‌ன் செவிக‌ள்;

நான் பார்க்காத‌ நேர‌த்தில் என் ஆடையின் வாச‌த்தை முக‌ருகிற‌து உந்த‌ன் மூக்கு;

எப்போதும் இனிமையாக‌ பேசுகிற‌து உந்த‌ன் வாய்;

என் த‌லையை சாய்க்கும் போது தாங்கி பிடிக்கிற‌து உந்த‌ன் தோள்க‌ள்;

வெளியே செல்லும் போது என் கையோடு கை கோர்க்கிற‌து உந்த‌ன் கைக‌ள்;

எப்போதும் என்னோடு ப‌ய‌ணிக்க‌ துடிக்கிற‌து உந்த‌ன் கால்க‌ள்;

என‌க்காக‌வே துடிக்கிற‌து உந்த‌ன் இத‌ய‌ம்;

எவ‌ருக்காக‌வும் என்னை விட்டு கொடுக்காம‌ல் இருக்கிற‌து உந்த‌ன் குண‌ம்;

என‌க்காக‌ உல‌கையே எதிர்க்க‌ துணிகிற‌து உந்த‌ன் தைரிய‌ம்;

காத‌ல‌னே என்னை நீ இவ்வ‌ள‌வு காத‌லிப்ப‌தால்;

காத‌லிக்கிறேன் அந்த காத‌லை!!!

திருமணத்திற்குப் பின்:

என்னை ப‌ற்றி சிந்திக்க ம‌றுகிற‌து உந்த‌ன் மூளை;

ர‌க‌சிய‌மாய் ம‌ற்ற‌ பெண்க‌ளை ர‌சிக்கிற‌து உந்த‌ன் க‌ண்க‌ள்;

என் பேச்சை ஒரு நொடி கூட‌ கேட்க‌ த‌வ‌றுகிற‌து உந்த‌ன் செவிக‌ள்;

என் வாச‌த்தை கூட‌ ம‌ற‌ந்து போன‌து உந்த‌ன் மூக்கு;

எப்போதும் என்னிட‌ம் ச‌ண்டை போடுகிற‌து உந்த‌ன் வாய்;

என் த‌லையை சாய்க்கும் போது தாங்கி பிடிக்க இப்போது இல்லை உந்த‌ன் தோள்க‌ள்;

வெளியே செல்லும் போது என் கையோடு கை கோர்க்க‌ ச‌லிக்கிற‌து உந்த‌ன் கைக‌ள்;

என்னோடு ப‌ய‌ணிக்க‌ நேர‌மில்லாம‌ல் அலுவ‌ல‌க‌த்துக்கு ஓடுகிற‌து உந்த‌ன் கால்க‌ள்;

ந‌ம் எதிர்கால‌ சொகுசு வாழ்வை எண்ணியே துடிக்கிற‌து உந்த‌ன் இத‌ய‌ம்;

உன் உற‌வின‌ர் முன் என்னை விட்டு கொடுக்காம‌ல் பேச‌ த‌ய‌ங்குகிற‌து உந்த‌ன் இய‌ல்பு;

என‌க்காக‌ உல‌கையே எதிர்க்க‌ யோசிக்கிற‌து உந்த‌ன் தைரிய‌ம்;

கண‌வ‌னே என்னை நீ காத‌லிக்க‌ ம‌ற‌ந்த‌தால்;

வெறுக்கிறேன் ந‌ம் க‌ல்யாண‌த்தை!!

________________________________________________

குழு க (ஒரு ஆணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்கு முன்:

என்னை ப‌ற்றியே சிந்திக்கிற‌து உன்த‌ன் மூளை;

ர‌க‌சிய‌மாய் என்னை ர‌சிக்கிற‌து உந்த‌ன் க‌ண்க‌ள்;

என் பேச்சை ம‌ணி க‌ண‌க்காக‌ ர‌சித்து கேட்கிற‌து உந்த‌ன் செவிக‌ள்;

நான் பார்க்காத‌ நேர‌த்தில் என் ஆடையின் வாச‌த்தை முக‌ருகிற‌து உந்த‌ன் மூக்கு;

எப்போதும் இனிமையாக‌ பேசுகிற‌து உந்த‌ன் வாய்;

என் த‌லையை சாய்க்கும் போது தாங்கி பிடிக்கிற‌து உந்த‌ன் தோள்க‌ள்;

வெளியே செல்லும் போது என் கையோடு கை கோர்க்கிற‌து உந்த‌ன் கைக‌ள்;

எப்போதும் என்னோடு ப‌ய‌ணிக்க‌ துடிக்கிற‌து உந்த‌ன் கால்க‌ள்;

என‌க்காக‌வே துடிக்கிற‌து உந்த‌ன் இத‌ய‌ம்;

எவ‌ருக்காக‌வும் என்னை விட்டு கொடுக்காம‌ல் இருக்கிற‌து உந்த‌ன் குண‌ம்;

என‌க்காக‌ உல‌கையே எதிர்க்க‌ துணிகிற‌து உந்த‌ன் தைரிய‌ம்;

காத‌ல‌னே என்னை நீ இவ்வ‌ள‌வு காத‌லிப்ப‌தால்;

காத‌லிக்கிறேன் அந்த காத‌லை!!!

க‌ல்யாண‌த்துக்கு பின்:

என்னை ப‌ற்றி சிந்திக்க ம‌றுகிற‌து உந்த‌ன் மூளை;

ர‌க‌சிய‌மாய் ம‌ற்ற‌ பெண்க‌ளை ர‌சிக்கிற‌து உந்த‌ன் க‌ண்க‌ள்;

என் பேச்சை ஒரு நொடி கூட‌ கேட்க‌ த‌வ‌றுகிற‌து உந்த‌ன் செவிக‌ள்;

என் வாச‌த்தை கூட‌ ம‌ற‌ந்து போன‌து உந்த‌ன் மூக்கு;

எப்போதும் என்னிட‌ம் ச‌ண்டை போடுகிற‌து உந்த‌ன் வாய்;

என் த‌லையை சாய்க்கும் போது தாங்கி பிடிக்க இப்போது இல்லை உந்த‌ன் தோள்க‌ள்;

வெளியே செல்லும் போது என் கையோடு கை கோர்க்க‌ ச‌லிக்கிற‌து உந்த‌ன் கைக‌ள்;

என்னோடு ப‌ய‌ணிக்க‌ நேர‌மில்லாம‌ல் அலுவ‌ல‌க‌த்துக்கு ஓடுகிற‌து உந்த‌ன் கால்க‌ள்;

ந‌ம் எதிர்கால‌ சொகுசு வாழ்வை எண்ணியே துடிக்கிற‌து உந்த‌ன் இத‌ய‌ம்;

உன் உற‌வின‌ர் முன் என்னை விட்டு கொடுக்காம‌ல் பேச‌ த‌ய‌ங்குகிற‌து உந்த‌ன் இய‌ல்பு;

என‌க்காக‌ உல‌கையே எதிர்க்க‌ யோசிக்கிற‌து உந்த‌ன் தைரிய‌ம்;

கண‌வ‌னே என்னை நீ காத‌லிக்க‌ ம‌ற‌ந்த‌தால்;

வெறுக்கிறேன் ந‌ம் க‌ல்யாண‌த்தை!!!

இதற்கான பதில் இதோ என் வரிகளில்

திருமணத்திற்குப் பின்:

😀சிந்திக்கும் மூளைக்கு தித்திக்கும் தேனாய் 
காலம் கடந்து கவிதை படைக்கும்
என் முப்பொழுது தேவை 
நீ ஒருதியே

😁கேளாய் என் சுவசமே 
அள்ளி அனைத்திட 
அத்தனை உரிமையும்
எனதாய் இருக்க 
தள்ளி நின்று ரசிபதே என் கண்களின் களவியடி பெண்ணே

😂மங்கையின் முத்தான சிதறல்கள் மழலை மொழி பேசும் பட்சிளக்குழந்தை சாயலில் காமதேவனின் பாற்கடல் கடைந்தெடுத்த ஊற்றே 
அதில் விழுந்தவரெல்லாம் மயங்கி கிடக்க நான் மட்டுமென்ன விதிவிலக்கா

😄தெவிட்டாத தாய்ப்பால் தித்திக்கும் தமிழ் பால் 
பருகிய எனக்கு என் அன்னை ஸ்பரிசம் மறந்தாபோகும் 
அத்தனை உறவும் நீயே ஆனபின் 
உன் தாய்மடி வாசம் எப்படி மறந்து போகும் இந்த மழலைக்கு

😃என் அன்னை நீயே எனினும் 
தோள் மீது தோள் சாயும் தருணம் 
கருப்பை இல்லா தகப்பன் நானே
என நினைத்து நான் பட்டகடன் தீர்க்க ஏக்கம் கொள்கிறேன் நிழலே

😅விரலோடு விரலென 
புரியா புதுமொழி படைத்தது 
பொன்னிற மேனிமுன்னால் 
புதைந்து போகவே துடிக்கிறது என் ஆண்மை

😆பக்கம் நடப்பது உன் சுவடு
எனவே 
அதை எட்டி தொடர நினைக்குது என் மனமே

😋மறந்தும் உன்னை வைகமாட்டேன்  இதயத்தில் 
உன்னை துடிக்க விட்டு நான் மட்டும் எப்படி வாழ்வேன் இந்த நரகத்தில்

😉ஒருவரி கவிதை (நீ)யென இருக்க
உன்னை வர்ணிக்கும் என் மறுவரி ஓர் அமுதே  அன்பே

🙂விழாமல் விழுந்துவிட்டேன்
உன் ஒரப் புன்னைகையில்  
விழ்ந்தவன் எளவும் இல்லை 
உன்னை யாருக்கேனும் விட்டுக்கொடுக்கும் மனமும் எனக்கில்லை

🤓பின்னால் நீ இருப்பாய் என்றால் 
முன்னால் நான் எதிர்ப்பின் இந்த உலகத்தை

😎காலம் காட்டி கொடுத்த கவிதையடி நீ 
உன்னை நேசிக்காமல் யாரை நேசிக்க....?

🙄🙄🙄🙄கல்யாணத்திற்கு பின் ...😏

😮அடி பேதை பெண்ணே 
புரியவில்லையா உனக்கு 
மனந்த உன்னை மகிழ்ச்சியாய் பார்த்துக்கொள்ள நான் கொள்ளும் போராட்டம்

🤐சிந்திக்க நேரமின்றி சிறுநொடியுடன் சண்டையிடுகிறேன் சிறுபொழுதாவது கொடு அவளோடு உறவாட அல்ல உரையாடவாது

😒காமம் அது கண்களுக்கு மட்டுமே காதல் என் களவி நயகியுடன் மட்டுமே

😣காமமும் காதலும் காலத்தின் போக்கிலே பயணிக்க 
தனியொரு மனிதனாய் மாற 
நான் புதுயுக பிறவி அல்ல காலத்தையும் தாண்டி களவிக்கு இலக்கணம் வகுத்த 
ஆதி தமிழ் எனவம்சம் 
அழகுள்ள இடத்தை ரசிகாவிடில் நான் பெற்ற பிறவியின் பயன் ஏது

😓காதலின் போது உரையாட 
உன் உயிர் மட்டுமே எனக்கு சொந்தம் 
இன்றோ நம்மோடு உறவாட நமக்கென்று சிறு பிள்ளைகள்
உறவுக்காக உரையாடும் உள்ளம் எத்தனை பேச்சுக்களை தான் கேட்கும் 
செவி மறுத்து என்னுள் எல்லாம் புதைத்து வாழ்கிறேன் 
இது காலத்தின் ஆட்சி 
கயவன் நான் என்செய்வேன்

🤒வாழ்க்கை வரையறை இல்லாமல் போக வாசனை மற்றும்மல்ல 
சில நாற்றங்களும் எனக்கு தெரிவதில்லை பெண்ணே

😷அணைக்க அம்மாவும் இல்லை
தணிக்க தந்தையும் இல்லை 
தனியேன் தவிப்பை பரிமாற்ற 
நீயே நீயே 
உன்னுடன் சண்டையிட காரணம் தேவையில்லை 
காதலின் போது நான் உரைத்த அம்மாவே
என் வார்த்தைக்காண விளக்கம்

😬தோழன் என்ற தோள் மாறி
தகப்பன் என்னும் தடை வந்தபிறகு 
சுமைகளே சுகமாய் ஏற்றுக்கொண்டேன்
இதில் எங்கே சருக்குகின்றேன் என எனக்கே தெரியவில்லை 
மன்னிப்பாய் மதியே

😳கையோடு கைகோர்த்து 
கவலை இன்றி நடக்க இனி 
வயதில்லை பெண்ணே 
வன்மம் இல்லா வாழ்க்கை நடத்த சில கரைகளும் என்கைமேல் பதிந்துவிட்டது 
அடி புனிதமானவளே உன்னையும் எப்படி
நான் கலங்கப்படுத்த

😵காலத்தோடு உறவாடும் கால்கள் 
கட்டுப்பாடின்றி நகர ஆரம்பித்துவிட்டது 
ஓடும் நேரமே எனதாய் இல்லை 
என் கால்கள் மட்டும் எப்படி ?

😡வறுமை என் திறமையை கட்டிபோட்டது
நான் வருந்திய பொழுதுகள் 
இனி
ஒருபோதும் என் குலத்திற்கு நடவாயிருக்கவே
இந்த ஓய்வில்லா தேடல்

😱என்னுள் ஓடும் உணர்வு உனதாய் இருக்கவே உன்னை இகழ்ந்து 
உறவை வழிமொழிக்கிறேன் 
அடி ஆதியே உயிரே நீயாய் இருப்பின் உன்னை எப்படி நான் வெறுப்பேன்

😰ஆம் உண்மைதான்
நம் உறவை உலகம் ஒதுக்கிவிட கூடாதென்பதற்காகவே 
ஒதுங்கி நிற்கிறேன்

😘கணவன் என்று உரைத்தாயே பெண்ணே இதிலிருந்தே தெரியவில்லையா உன் காதல் யாருடன் என்று .....

😍இத்தனை உறவும் நீயே தந்தாய்
இந்த ஒரு உணர்வை  மட்டும் எப்படி மறந்தாய்

🙄உன்னிடம் செய்த சத்தியமே இதற்கான சாட்சி இதுவே என் மனசாட்சி .....🙂😎😎😎 


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top