30

"இல்ல ப்ளீஸ். இப்படி பண்ணாத. அதுக்கு என்னை உயிரோடு கொன்னுடு." என்றாள் கண்ணீரோடு.

"ஹா..ஹா..ஹா.." என்று சிரித்தவன்.

"அப்படியே நீ செத்தாலும் எனக்கு லாபம் தான்." என்றான்.

இரு கால்களில் இருந்து அவளின் சேலை மெதுவாய் மேலேற தொடங்க, நரக வேதனையில் துடிக்க தொடங்கினாள்.

அவளின் கெண்டை கால்கள் தெரிய தொடங்கும் பொழுதே அதிரடியாக உள்ளே நுழைந்த ஷிவா இருவரையும் அடித்து நொறுக்கினான்.

அதற்குள் உள்ள வந்தவர்கள் வேகமாய் அப்பெண்ணின் கட்டவிழ்த்து வெளியே கூட்டி சென்றனர்.

"ஏன்டா பொண்ணுங்கன்னா என்ன உங்களுக்கு அவ்ளோ சாதாரணமா போச்சா?" என்று போட்டு அடிக்க முகமின் வடிவமே மாறி போய் மயங்கிருந்தான் அவன்.

"இவனை நம்ம இடத்துல வைங்க. அவங்களை சேப்பா வைங்க. வந்து பேசுறேன்." என்று அவர்களை அனுப்பிவிட்டு மீண்டும் உள்ளே நுழைந்து எல்லா இடத்திலும் தேடியபின், "அந்த இன்னொரு பொண்ணும் இவளும் எங்க?" என்று முகத்தில் இருந்த வியர்வையை துடைத்தபடி யோசிக்க,லேசான முனகல் சத்தம் கேட்கவும் எங்கே வருகிறது என்று தேட தூரத்தில் கை கால்கள் கட்டப்பட்டு வாய் அடைத்து செடிகளின் நடுவே வீசப்பட்டிருந்தாள் மயில்.

ஓடி சென்று அவளை தூக்கியவன் வாயில் இருந்த துணியை எடுத்தவுடன் இருமல் தொடர்ந்தது.

"சார் அந்த பெண்ணை காப்பாத்துங்க. அதோ... அங்க தான் கொண்டு போனாங்க." என்றாள் மூச்சு பலமாக வாங்க.

"யாரு கூட்டிட்டுப்போனா?" என்றான் கோபமாய்.

"அஞ்சு பேர்... ரொம்ப குடிச்சிருந்தாங்க... ஒரு பொண்ணு... அவளுக்கு போதை மருந்து ஊசி போட்ருக்காங்க போல. சுயநினைவு இல்லாம இருக்கா..." என்றாள் கண்ணீர் வழிய.

"சரி... சரி.. நான் போறேன். நீ அதோ பாரு... என் கார் இருக்குல்ல... அதுல போய் உட்காரு..." என்று அந்த திசையில் ஓடினான்.

அங்கே அடர்ந்த காடு போல் இருக்க, சற்று தொலைவில் ஒரே ஒரு மர வீடு மட்டும் இருந்தது.

சத்தம் வராமல் உள்ளே நுழைந்தவன் அங்கு பார்த்த காட்சியில் அதிர்ச்சியாகி நின்றான்.

ஒருவன் மட்டும் அலைபேசியில் படமெடுத்து கொண்டிருக்க, மற்ற நால்வரும் சுயநினைவில்லா அப்பெண்ணை பலவந்த படுத்த முயர்ச்சித்து கொண்டிருந்தார்கள்.

நரம்புகள் புடைக்க கோபம் எகிற, ஐவரையும் போட்டு பந்தாடினான். அவன் அடித்த அடியில் ஒருவரும் எழுந்திருக்க முடியா அளவு காயங்கள் மோசமானதாக இருந்தது.

மயக்கத்தில் இருந்த பெண்னை அள்ளிக்கொண்டு காரில் படுக்க வைத்தவன். மருத்துவமனைக்கு சென்று இரு பெண்களையும் சேர்த்து மூன்றாவது பெண்னையும் அழைத்து வந்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தான்.

முதலில் காப்பாற்றிய பெண் அழுது கொண்டே இருக்க, "இங்க பாருங்க நீங்க அழறதால எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது. இது இதோடு நிக்காது. எனக்கு தெரியும். நீங்க வாய திறந்து பேசினா தான்  உதவ முடியும்." என்றான் ஷிவா அழத்தமாகவும் தெளிவாகவும்.

"சர் நான் இந்த ஊர் இல்ல சார். கொடியனூர் பக்கத்துல ஒரு கிராமம். ரொம்ப ஏழ்மையான எங்க குடும்பம் எங்களோடது. நாங்க நாலு பேர். எனக்கு பெரியவ அக்கா. ரெண்டாவது நா. எனக்கு கிழ ஒரு தங்கச்சி, ஒரு தம்பி. அம்மா அப்பா. ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வீட்ல கஷ்டம்.

நான் பி.ஏ தமிழ் முடிச்சுருக்கேன் சார். எங்க ஊர் பக்கமெல்லாம் பெண் பிள்ளைங்களை படிக்க வைக்கவும் மாட்டாங்க.  வேலைக்கும் அனுப்ப மாட்டாங்க. பொண்ணுங்க வீட்டை துடைச்சு, ஆக்கி போட்டு சுகம் கொடுக்க மட்டும் தான்றது அவங்களோட மன நிலை. ரொம்ப அடம்பண்ணி என் உயிரை பணயம் வச்சி தான் நான் படிச்சேன். குடும்ப கஷ்டம் வேலைக்கு போறேன்னு சொன்னேன். முடியவே முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. எங்க வீட்ல ரொம்ப கஷ்டப்பட்டு சம்மதம் வாங்கி இங்க வந்தேன். அக்காவை இந்த ஊர்ல தான் கொடுத்துருக்கங்க. அதான் இங்க வேலை பார்க்க எங்க வீட்ல சம்மதிச்சாங்க." என்று நிறுத்தினாள்.

பேச்சு மட்டும் தான் நின்றதே தவிர கண்ணீர் நிற்கவில்லை.

அவளது கண்களை துடைத்துவிட்ட ஷிவா, "பெண்கள் தான் இந்த உலகத்துல இருக்க ஆக்கிற ஷக்தியாவும் அழிக்கிற கடவுளாவும் நினைக்கிறேன். அப்படி பட்ட பெண்ணினத்தை சேர்ந்த நீ ஒன்னுத்துக்கும் உதவாத காரணத்துக்காக அழுது உன் கண்ணீரை வீணாக்கலாமா மா. என்னை உன் அண்ணனா  நினைச்சுக்கோ. என்ன நடந்தது அழாம சொல்லுமா?" என்றான் ஷிவா.

"முதல்ல இங்க வந்து எங்க அக்கா வீட்ல தங்கி தான் வேலை பார்த்தேன் சார். கொஞ்ச நாள் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா, போக போக என் அக்கா வீடுகாரோட நடவடிக்கை ஒரு மாதிரி வித்தியாசமா இருந்தது. முதல்லயே எனக்கு சுருக்குன்னு பட்டுடுச்சி. அதனால முடிஞ்ச அளவு விலகி போனேன். என் அக்காவையும் அக்கா பெண்ணையும் மாமா நல்லா தான் பார்த்துகிட்டார். அதனால எங்க அக்காகிட்ட இதை பத்தி பேசி அவங்களுக்குள்ள பிரச்சனை பண்ண விரும்பலை.

நான் அமைதியா இருந்ததை தனக்கு சாதகமா பயன் படுத்த நினைச்ச எங்க மாமா அக்காவும் பிள்ளையும் இல்லாத நேரத்துல அத்துமீறி நடக்க முயற்சி செஞ்சார். முடிஞ்ச அளவு போராடி முடியாதுன்ற நிலமைல நாலு அறைவிட்டு அக்கா கிட்ட வேலைக்கு தூரமா இருக்குன்னு கெஞ்சி வீட்ல யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி வீட்டை விட்டு ஹாஸ்டல்ல வந்து தங்கினேன் சார்.

கொஞ்ச நாள் கழிச்சு என் மாமா என்னை பார்க்க வந்தார். என்னை மன்னிச்சிரும்மா. உங்க அக்கா கொஞ்ச நாளா என்னை ஒதுகினதுல புத்தி கெட்டு போய் இப்படி செஞ்சுட்டேன். நீ என்னை கேட்ட கேள்வில சாகனும்னு தோணுச்சு. என் பொண்ணு... அவளை பார்த்து தான் நீ எவ்ளோ துடிச்சிருப்பன்னு புரிஞ்சிகிட்டேன். தயவு செஞ்சு வீட்டுக்கு வாம்மா. இனி உன்னை எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன்னு அழுதார்.

நா போகலை. நான் வேலை செய்ற இடத்துல செதுக்கின்னு ஒருத்தன் என்னை விரும்புறதா சல்யாணம் செஞ்சுக்குறேன்னு கேட்டான். அவன் பழக்க வழக்கமும் சரி இல்லை. கல்யாணத்தை பத்தி யோசிக்கிற நிலமைல என் குடும்பம் இல்லை. அதனால நாசுக்கா மறுத்துட்டேன்.

அந்த வஞ்சம் புடிச்சவன் என்னை எப்படியாவது அடையுனும்னு பலமுறை முயற்சி செஞ்சான். முடியலை. கடைசியா அவன் எடுத்த ஆயுதம் தான் கொடூரமானது.

எங்க அக்கா பொண்ணு எட்டாவது படிக்கிறா. அவளை காட்டி என்னை பலவந்த படுத்த முயற்சி பண்ணான். உள்ளுக்குள்ள பயம் இருந்தாலும்  நான் சம்மதிகலை. திடீர்னு ஒரு நாள் பொண்ணு ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு இன்னும் வரலைன்னு அக்கா போன் பண்ணி அழுதாங்க. அப்போ இவனும் எனக்கு போன் பண்ணான்.

உன் ரூமலையே உனக்கு தெரியாம கேமரா வச்சுருகேன்டி. இப்போ நீ எனக்கு வேணாம். அதுக்கு பதிலா உங்க அக்கா பொண்ண யூஸ் பண்ணிக்கிறேன்னு சொன்னான். ஒரு நிமிஷம் நெஞ்சே வெடிச்சிருச்சு. நீ என்ன சொன்னாலும் செய்றேன் அக்கா பொண்ணை மட்டும் விட்டுடுன்னு அழுதேன். அப்போ அங்க இருந்த ஐஸ்காரர்கிட்ட அவர் கொடுக்கிற ஐஸ் வாங்கி சாப்பிட சொன்னான். நைட் எந்த அடமும் பண்ணாம வரணும்னு கண்டீஸன் போட்டு பாப்பாவை விட்டுட்டான். அந்த ஐஸ்ல என்ன இருந்தது தெரியாது. சாப்பிட்டவுடன் முழுச்சிருந்தேன் ஆனா உடம்புல எந்த பார்ட்ஸும் வேலை செய்ல. நைட் வலுக்கட்டாயமா இங்க தூக்கிட்டு வந்துட்டாங்க. இங்க வர வரைக்கும் என்ன நடக்க போகுதுன்னு தெரியாது.

ஆனா வந்த பிறகு எதுக்காக கூட்டிட்டு வந்துருக்காங்கன்னு தெரிஞ்ச பிறகு. இந்த உயிர் உடனே போய்டனும்னு தோணுச்சு. ஒரு வேளை அவங்க நினைச்சா மாதிரி ஏதாவது நடந்திருந்தா நான் இப்போ உயிரோட இருந்திருக்க மாட்டேன்." என்று முகத்தை மூடி அழுதாள்.

குடிக்க தண்ணீர் கொடுத்தவன், "என்ன பிளான் பண்ணாங்க?" தனக்கு தெரிந்தாலும் அவளின் வாயால் கூற வேண்டும் என்று கேட்டான்.

"வெளிநாட்டில் இருக்கவங்களுக்கு குழந்தை பெத்துகிறபாக்கியம் இல்லாம போகுதாம். அந்த மாதிரி ஆளுங்களுக்கு குழந்தை பிறக்க இங்க குடும்ப கஷ்டம், கேட்க யாருமில்லைன்னு இருக்க பொண்ணுங்க லிஸ்ட் எடுத்து அவங்களை கண்காணிக்கிறாங்க. அதுவும் ஹாஸ்டல்ல தங்கி வேலைக்கு போற பொண்ணுங்களையும் படிக்கிற பொண்ணுங்களையும் குறிவெச்சு வேலை செய்றாங்க." என்று நிறுத்தினாள்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #family#love