ஒட்டு துணிகூட இல்லாமல்
பிறந்த மேனியோடு கட்டாந்தரையில்
புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு
விளையாடிகொண்டிருந்தான்
அதிசயக்குழந்தை
டேய் எழுந்திரு என்று அதட்டினேன்
எதற்கு என்று கேட்டான் அவன் ....!!!
மண்ணுக்குள் விளையாடுகிறாயே
உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே
என்றேன்
நீங்க மட்டும் அழுகில்லையோ ?
என்றான் அவன் - மேலும் சொன்னான்
ஆசானுக்கு நான் சொல்வதா ?
ஊழ்வினை உடம்பே அழுக்குதான் .
பஞ்ச பூத கூட்டுத்தானே உடம்பு ....!!!
மனத்தின் அழுக்கை நீக்க
கண்ணீரால் (தண்ணீர் ) கழுவுகிறீர்கள்
உடலின் அழுக்கை நீக்கவும்
தண்ணீரால் கழுவுகிறீர்கள்
கோபப்படும் போது " நெருப்பாய்" கொதிக்குறீங்க
உள்ளத்தை துளைக்கும் சொல்லை
காற்றோடு கலக்கிறீங்க
உங்களின் அசுத்தம் ஆகாயத்தையும்
அசுத்தமாக்கும் போது
நான் இந்த மண்ணில் புரளுவது மட்டும்
உங்களுக்கு அழுக்காய் தெரிகிறதோ ?
என்றான் - அதியக்குழந்தை.....!!!
போதும் போதும் உன் வியாக்கியானம் ..
என்று கூறிக்கொண்டு ஒரு சிறு தடி எடுத்து ...
அதட்டினேன்
விழுந்து விழுத்து சிரித்தான்
ஏனடா சிரிகிறாய் ?
இயலாமையின் இறுதி கருவியே
அதிகாரம் என்றான் ...!
திகைத்து நின்றேன் ....!!!
தன் பகுத்தறிவால் விடைதராமல்
பட்ட தடியை தூக்கி நியாயம் தேடும்
ஆசானே - உம்மில் குற்றமில்லை
"ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது "
என்பதுபோல் உங்கள் புத்தக படிப்பு
எனக்கு சரிவராது என்றான்......!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top